’இடஒதுக்கீடு ரயில் பெட்டிபோல ஆகிவிட்டது; யாரும் மற்றவர்களை ஏற அனுமதிப்பதில்லை': சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

நாட்டில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது ரயில் பெட்டியைப் போல மாறிவிட்டது, இந்தப் பெட்டியில் ஏறுபவர்கள் மற்றவர்களை உள்ளே அனுமதிக்க விரும்புவதில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது ரயில் பெட்டியைப் போல மாறிவிட்டது, இந்தப் பெட்டியில் ஏறுபவர்கள் மற்றவர்களை உள்ளே அனுமதிக்க விரும்புவதில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
supreme court

’இடஒதுக்கீடு ரயில் பெட்டிபோல ஆகிவிட்டது.. அதில் ஏறுபவர்கள் மற்றவர்களை ஏற அனுமதிப்பதில்லை'

மகாராஷ்டிர மாநில உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நாட்டில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது ரயில் பெட்டியைபோல மாறிவிட்டதாகவும், ஏற்கனவே பெட்டியில் ஏறுபவர்கள் மற்றவர்களை உள்ளே அனுமதிக்க விரும்புவதில்லை என்றும் தெரிவித்தது.

Advertisment

மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்கள் கடைசியாக 2016-2017 ஆம் ஆண்டில் நடைபெற்றன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) வேட்பாளர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான சட்டப் போராட்டமே இந்தப் பதவிகளுக்கான நியமனம் தாமதமாவதற்கு முக்கியக் காரணமாகும். 2021 ஆம் ஆண்டில், ஓபிசியினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் மகாராஷ்டிரா அரசின் அவசரச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Reservation business has become like a railway

மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. வழக்கை விசாரித்தபோது, ​​நீதிபதி சூர்ய காந்த் மிகவும் கடுமையான கருத்தை தெரிவித்தார். இடஒதுக்கீட்டில் உரிமை கோருவது தொடர்பாக அவர் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Advertisment
Advertisements

விசாரணையின் போது, ​​நீதிபதி சூர்யகாந்த், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இப்போது ஒரு ரயில் பெட்டியைப் போல மாறிவிட்டது, அதில் மக்கள் ஒரு முறை ஏறிய பிறகு, வேறு யாரையும் ஏற விடுவதில்லை என்று கூறினார். இந்த அறிக்கையில், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரை மேம்படுத்துவதற்காக முதலில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு முறையின் நோக்கம், இப்போது சில குழுக்களுக்கு ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒரு வழிமுறையாக மாறி வருகிறது.

மக்கள் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொண்டால், அந்தப் பலன் தங்களுக்கு மட்டுமே தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அரசாங்கங்கள் இன்னும் பல வகுப்புகளை அடையாளம் காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய மக்கள் உள்ளனர்.  ஒரு சில குடும்பங்கள் மற்றும் குழுக்கள் மட்டுமே ஏன் இந்த இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுகின்றன என நீதிபதி கேள்வி எழுப்பினார். நீதிபதி சூர்யகாந்த் வரும் நாட்களில் இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி என்.கே.சிங் உள்ளிட்ட அமர்வின் மற்றொரு நீதிபதி உடனிருந்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவின்படி, மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்கள், ஜூலை 2022-ல் பந்தியா ஆணையம் அறிக்கையை சமர்ப்பிக்கும் முன் இருந்த OBC ஒதுக்கீட்டு சதவீதத்துடன் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதேநேரத்தில், மாநிலத் தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், 4 மாதங்களுக்குள் தேர்தலை முடிக்கச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Supreme Court Reservation Maharashtra

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: