Advertisment

ஆட்சிக்கு எதிரான மனநிலை, நலத் திட்டங்களின் தோல்வி; தெலங்கானாவில் பி.ஆர்.எஸ்-ஐ அகற்றிய காங்கிரஸ்

பி.ஆர்.எஸ் பல நகர்ப்புற இடங்களை வென்ற போதிலும், 'மாற்றத்திற்கு ஆதரவான' அலைக்கு மத்தியில் காங்கிரஸ் கிராமப்புறப் பகுதிகளை வென்றது; கே.சி.ஆரின் நலத்திட்டங்களை அதே போன்ற உறுதிமொழிகள் மூலம் காங்கிரஸ் வீழ்த்தியது

author-image
WebDesk
New Update
telangana congress

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது, ஹைதராபாத் காந்தி பவனுக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கட்சி வெற்றிப் பெற்றதைக் கொண்டாடினர். (பி.டி.ஐ)

Sreenivas Janyala

Advertisment

பாரத் ராஷ்டிர சமிதி (BRS) அரசுக்கு எதிரான ஆட்சிக்கு எதிரான மனநிலையைக் கைப்பற்றிய காங்கிரஸ், தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டிலிருந்து முதல் முறையாக 119 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

ஆங்கிலத்தில் படிக்க: Riding anti-incumbency wave, welfare plank, Congress ousts BRS in Telangana

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நான்கு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தி மையத்தில் பா.ஜ.க.,வின் வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டியதால், தென்னிந்தியாவில் தெலங்கானா காங்கிரஸுக்கு வெள்ளிக் கோடாகத் தோன்றியது.

மே மாதம் கர்நாடக தேர்தலில் கட்சிக்கு கிடைத்த வெற்றியின் உற்சாகத்துடன், தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (TPCC) தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டியின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸின் பிரச்சாரம், இரண்டு முறை முதலமைச்சரும், பி.ஆர்.எஸ் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் அல்லது கே.சி.ஆர்., பல்வேறு பிரிவினருக்கான தனது பல நலத்திட்டங்களின் மூலம் ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவார் என்ற நம்பிக்கையைத் தகர்த்தது.

2018 தேர்தலில் 88 இடங்களைப் பெற்ற பி.ஆர்.எஸ் கட்சியின் எண்ணிக்கை 39 இடங்களுக்குச் சரிந்தது. எவ்வாறாயினும், ஹைதராபாத் மற்றும் ரங்கா ரெட்டி மாவட்டங்களில் பெரும்பாலான நகர்ப்புற இடங்களை அக்கட்சி வென்றது, அங்கு கணிசமான எண்ணிக்கையிலான ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட வாக்காளர்கள் பி.ஆர்.எஸ் கட்சியை விட்டு வெளியேறக்கூடும் என்று அஞ்சப்பட்டது, ஆனால் அவர்கள் பெரும்பாலும் பி.ஆர்.எஸ் உடன் நின்றனர்.

பி.ஆர்.எஸ் கட்சியின் 14 அமைச்சர்களில் 6 பேர், புவ்வாடா அஜய், எஸ்.நிரஞ்சன் ரெட்டி, கொப்புலா ஈஸ்வர், இந்திரகரன் ரெட்டி, எர்ரபெல்லி தயாகர் ராவ், மற்றும் வி.ஸ்ரீனிவாஸ் கவுட் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்தனர்.

முந்தைய தேர்தலில் வெறும் 19 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், இந்த முறை 64 இடங்களை வென்றது, காங்கிரஸ் கட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு பிரச்சாரத்தை நடத்தியது.

கிராமப்புற பகுதிகளான நல்கொண்டா, வாரங்கல், கரீம்நகர், நிஜாமாபாத், கம்மம், மஹ்பூப்நகர் மற்றும் அடிலாபாத் ஆகிய பிரிக்கப்படாத மாவட்டங்களில் பல இடங்களை பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் வென்றது. கம்மம் பகுதியில் உள்ள நிலக்கரி பெல்ட் தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

2018 தேர்தலில் வெறும் 1 இடத்திலும், அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் மேலும் 2 இடங்களிலும் வெற்றி பெற்ற பா.ஜ.க, இந்த முறை 8 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க.,வின் வாக்கு சதவீதமும் 7 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்களான டுப்பாக்காவில் இருந்து எம் ரகுநந்தன் ராவ் மற்றும் ஹுசூராபாத்தில் இருந்து எட்லா ராஜேந்தர் ஆகிய இருவரும் தேர்தலில் தோல்வியடைந்தார், மேலும் டி அரவிந்த், சோயம் பாபுராவ் மற்றும் கட்சியின் தீப்பொறி மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் பாண்டி சஞ்சய் குமார் உள்ளிட்ட கட்சியின் மூன்று சிட்டிங் எம்.பி.,க்களும் தோல்வியடைந்தனர்.

ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான பி.ஆர்.எஸ் ஆட்சிக்குப் பிறகு, நாட்டின் புதிய மாநிலத்தில் காங்கிரஸை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது, தெலங்கானாவில் பெரும் பகுதி மக்களிடையே மாற்றத்திற்கான விருப்பமாகத் தோன்றுகிறது.

பி.ஆர்.எஸ் கட்சியின் நலத்திட்டங்கள், காங்கிரஸால் முன்மொழியப்பட்ட தேர்தல் அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளில், மேம்பட்ட வடிவில் இதே போன்ற திட்டங்களால் எதிர்க்கப்பட்டது.

இறுதிப் பகுப்பாய்வில், பி.ஆர்.எஸ் கட்சியின் திட்டங்கள், குறிப்பாக மாநிலத்தின் கிராமப்புறங்களில் காங்கிரஸுக்கு ஆதரவான "மாற்றத்திற்கு ஆதரவான அலைக்கு" எந்தப் பொருத்தமும் இல்லை. விவசாய நிதியுதவி திட்டத்தின் பயனாளிகளான சிறு மற்றும் குறு விவசாயிகளின் பெரும் பகுதியினர், பெரிய விவசாயிகளுக்கு அதிகப் பணம் கிடைப்பதாகக் கருதியதால், அதிருப்தி ஏற்பட்டது. பல வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கே.சி.ஆர் ஆட்சியில் மாநில பொதுப்பணி குழு 1 மற்றும் 2 தேர்வுகளை தாள் கசிவு மற்றும் ரத்து இல்லாமல் நடத்த முடியாததால் வருத்தமடைந்தனர்.

காங்கிரஸுக்கு பல்வேறு மாவட்டங்களில் பல பலமானவர்கள் கிடைத்துள்ளனர், அவர்கள் அங்கு கட்சியின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தனர்.

அவர்களில் பலர் தேர்தலுக்கு முன்னதாக பி.ஆர்.எஸ் அல்லது பா.ஜ.க.,வில் இருந்து காங்கிரஸுக்குத் திரும்பினர். கோமதிரெட்டி சகோதரர்களான வெங்கட் ரெட்டி மற்றும் ராஜ் கோபால் ரெட்டி முறையே நல்கொண்டா மற்றும் முனுகோடில் இருந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், இப்பகுதியில் இருந்து மற்ற எட்டு இடங்களையும் பெற்றுக் கொடுத்தனர். காடம் சகோதரர்களான காடம் விவேகானந்த் மற்றும் அவரது சகோதரர் வினோத் சென்னூர் மற்றும் பெல்லம்பள்ளி மற்றும் பக்கத்து தொகுதிகளையும் கட்சிக்கு வென்றுக் கொடுத்தனர்.

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க உதவிய சுனில் கனுகோலு போன்ற மூலோபாயவாதிகளின் உதவியால், தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் கட்சியின் ஆறு முக்கிய "உத்தரவாதங்கள்" மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் பற்றி வாக்காளர்களுக்கு திறம்படத் தெரிவிக்க முடிந்தது.

ரேவந்த் ரெட்டியின் பிரசாரக் கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. "நவம்பரில், மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு பி.ஆர்.எஸ் அரசு ஓய்வூதியமாக ரூ. 2,000 வழங்கியது, ஆனால் டிசம்பரில் காங்கிரஸ் அரசு உங்களுக்கு மாதம் ரூ. 4,000 கொடுக்கத் தொடங்கும்' என்று அவர் அறிவித்தபோது இதுபோன்ற பொதுக் கூட்டங்களில் அவர் பேசும் பேச்சுகள் அடிக்கடி பேசப்பட்டன. அடுத்த நான்கு ஆண்டுகளில் ரைத்து பந்து (Rythu Bandhu) நிதியை 16,000 ரூபாயாக உயர்த்துவோம், ஆனால் அடுத்த சீசனில் இருந்தே ரூ.15,000 வழங்குவோம் என்று பி.ஆர்.எஸ் உறுதியளித்து இருந்தது. இத்தகைய உறுதிமொழிகள் காங்கிரஸுக்கு வாக்குகளை அளித்தன.

காங்கிரஸின் வெற்றியை தெலங்கானா மாநிலத்திற்காக போராடிய தியாகிகளுக்கு அர்ப்பணித்த ரேவந்த் ரெட்டி, மாநிலத்தில் ஆட்சி அமைத்த பிறகு தெலங்கானா மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது கட்சியின் பொறுப்பு என்று கூறினார். "இது மக்களின் ஆணை... அவர்கள் (மக்கள்) மாற்றத்தை விரும்பினர் என்பதுதான் எளிய விஷயம். அவர்கள் கே.சி.ஆரை தோற்கடிக்க நினைத்தனர். அவர்கள் கே.சி.ஆரை தோற்கடித்துள்ளனர். அவ்வளவுதான்’’ என்று ரேவந்த் ரெட்டி கூறினார்.

கே.சி.ஆர் மற்றும் ரேவந்த் ரெட்டி ஆகியோர் முறையே அவர்களின் கஜ்வெல் மற்றும் கோடங்கல் தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அவர்கள் இருவரும் பா.ஜ.க.,வின் கே.வெங்கட ரமண ரெட்டியிடம் இரண்டாவது இடமான காமரெட்டியில் தோற்கடிக்கப்பட்டனர்.

கே.சி.ஆரின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமராவ் அல்லது பி.ஆர்.எஸ்.-ன் செயல் தலைவரான கே.டி.ஆர்., காங்கிரஸுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, தனது கட்சி தோல்வியை ஒரு "கற்றல் அனுபவமாக" எடுத்துக் கொண்டு செயல்படும் என்று கூறினார்.

ரேவந்த் ரெட்டி, கே.டி.ஆரின் வாழ்த்தை வரவேற்று, மக்களுக்கு நல்லாட்சி வழங்க பி.ஆர்.எஸ் கட்சியின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Telangana Congress Chandrashekhar Rao
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment