Advertisment

'மாநில அரசின் வருவாயை மத்திய அரசு சாப்பிடுகிறது'; டெல்லி ஜந்தர் மந்தரில் பினராய் விஜயன்

டெல்லி ஜந்தர் மந்தரில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

author-image
WebDesk
New Update
Pinarayi Vijayan at Jantar Mantar

டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பினராய் விஜயன்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pinarayi Vijayan at Jantar Mantar | மாநிலங்களுக்கு பாகுபாடுடன் மத்திய நிதியை பகிர்ந்தளிக்கும் மோடி அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் வியாழக்கிழமை (பிப்.8,2024) போராட்டம் நடத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன், “மாநிலங்களின் நிதி ஆதாரங்களை யூனியன் சாப்பிடுவதால் இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு பாதிக்கப்படுகிறது” என்றார்.

Advertisment

மேலும், மாநிலங்களின் உரிமைகள் நசுக்கப்படுவதாகவும், ‘நமது நிதி ஆதாரங்களை மத்திய அரசு தின்று கொண்டிருக்கிறது’ என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து விஜயன், "இதற்கு எதிராக எங்கள் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யவும், இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்கவும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.

இன்று நாம் ஒரு புதுப்பிக்கப்பட்ட போராட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறோம், இது மாநிலங்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் விடியலைக் குறிக்கிறது.

இந்த போராட்டம் மத்திய-மாநில உறவுகளில் சமநிலையை நிலைநிறுத்தவும் பாடுபடும்” என்று கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.

ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் கேரள முதல்வருடன் கலந்து கொண்டனர்.

பாஜக தலைமையிலான அரசின் நிதிக் கொள்கைகள் மாநிலத்தை நிதி ரீதியாக திணறடிப்பதாக கேரள அரசு குற்றம் சாட்டியது, விஜயன் தலைமையிலான நிர்வாகம், நடப்பு நிதியாண்டில் மாநில வரவுகளில் ரூ.57,400 கோடியை மத்திய அரசு குறைத்துள்ளதாகக் கூறியது.

இது குறித்து விஜயன் கூறுகையில், “பல ஆண்டுகளாக, மத்திய அரசு பல துறைகளில் மாநிலங்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளை ஆக்கிரமிக்கும் சட்டங்களை உருவாக்கி வருகிறது.

கூட்டுறவு அமைச்சகம் கூட உருவாக்கப்பட்டது. மாநிலங்களைப் பாதிக்கும் பிரச்னைகளில், மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல், அவர்களின் ஒப்புதலைப் பெறாமல், பன்னாட்டு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.

இவை அனைத்தும் மாநிலங்களின் உரிமைகள் எப்படி நசுக்கப்படுகின்றன என்பதற்கும், இந்தியா எவ்வாறு ஜனநாயகமற்ற ‘மாநிலங்களுக்கு மேல் யூனியன்’ ஆக மாற்றப்படுகிறது என்பதற்கும் உதாரணங்கள்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு ஆதாரமான மாநிலங்களின் நிதி ஆதாரங்களை மத்திய அரசு சாப்பிடுகிறது. இதனால் பாதிப்புகள் வருகின்றன.

கூட்டாட்சி முறையைப் பற்றி பேசும் அதே நபர்கள், மாநிலங்களுக்கு நிதி ஆயோக் மூலம் ஒதுக்க வேண்டிய வளங்களைக் குறைக்க முயல்கின்றனர்” என்றார்.

ஆங்கிலத்தில் வாசிக்க : ‘Rights of states being trampled upon, Centre eating into our financial resources’: Pinarayi Vijayan at Jantar Mantar

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Pinarayi Vijayan Jantar Mantar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment