ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் - ரூ.1,000 அபராதம் விதிக்க தெற்கு ரயில்வே முடிவு

ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
a

ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் ரூ.1,000 அபராதம்: தெற்கு ரெயில்வே

தெற்கு ரயில்வேயின் கீழ் நாள்தோறும் 350-க்கும் மேற்பட்ட ரயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதுபோக, சென்னை கோட்டத்தில் மின்சார ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகிறார்கள். இதற்கிடையே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நீண்ட தூரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் இது உயிரிழப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.

Advertisment

இதுபோன்ற சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் அதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ (அ) படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் நடைபெறும் பல்வேறு குற்றசம்பவங்களை நடக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டில் அமர்ந்தும், தொங்கியபடியும் சாகச பயணம் செய்வது நடக்கிறது. இது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 156-ன் கீழ் குற்றமாகும். சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் சாகச நடவடிக்கைகளைத் தடுக்க தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு கூறினர்.

Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: