/tamil-ie/media/media_files/uploads/2023/03/Selva-Kumar-Nadar.jpg)
செல்வ குமார் நாடார்
புனேயில் உள்ள அஷ்டவிநாயக் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வ குமார் நாடார், தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக வருமானம் தருவதாக வாக்குறுதி அளித்து, பல்வேறு வங்கிகளில் தனிநபர் கடன் பெற்று, 300 கோடி ரூபாய் மதிப்பிலான தனது நிறுவனத்தில் முதலீடு செய்வதாக ஏமாற்றி, தலைமறைவாகி விட்டார்.
காரடியில் தங்கியிருக்கும் ஐடி நிபுணரான பிரபாத் ரஞ்சன், 46, ஜூலை 2021 இல் அஷ்டவிநாயக் இன்வெஸ்ட்மென்ட்டின் டெலிமார்க்கெட்டர்களிடமிருந்து அழைப்பு வந்தது.
அப்போது, ஏற்கனவே உள்ள கடனை குறைந்த வட்டியில் மாற்றுவதற்கு உதவ அவர்கள் முன்வந்தனர்.
தொடர்ந்து, “நிறுவனம் எனது சுயவிவரத்தைப் பயன்படுத்தி பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கும் என்று அவர் என்னிடம் கூறினார்.
அந்தத் தொகையில் ஒரு பகுதியை எனது தேவைகளைப் பூர்த்தி செய்து, அந்தத் தொகையை 5 சதவீத வட்டியாக திருப்பிச் செலுத்துவேன்.
மீதமுள்ள தொகை அஷ்டவிநாயகிடம் முதலீடு செய்யப்படும், அது அந்தத் தொகைக்கான EMI-களை செலுத்தும். அவர்கள் 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீடு செய்த தொகையில் 5 சதவீதத்தையும், 5 வருட முடிவில் மற்றொரு 5 சதவீதத்தையும் எனக்குக் கொடுப்பார்கள் ”என்றார்கள்.
மேலும், வேலை இழப்பு ஏற்பட்டால் பூஜ்ஜிய சதவீத வட்டியில் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு வருமான ஆதரவு மற்றும் மருத்துவ அவசரநிலைகளைச் சமாளிக்க இதேபோன்ற நிதி உதவியும் அவருக்கு உறுதியளிக்கப்பட்டது.
தற்போது ரஞ்சன் இ.எம்.ஐ கட்ட முடியாமல் தவிக்கிறார். இதேபோல் பல்வேறு வாடிக்கையாளர்களிடம் செல்வ குமார் நாடாரிடம் சிக்கியுள்ளனர்.
செல்வ குமார் நாடார் தற்போது தலைமறைவாகிவிட்டார். இவர் கிட்டத்தட்ட ரூ.300 கோடி வரை ஊழலில் ஈடுபட்டுள்ளார் எனப் புகார் எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.