Advertisment

சபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sabarimala verdict women protest, சபரிமலை தீர்ப்பு

sabarimala verdict women protest, சபரிமலை தீர்ப்பு

சபரிமலை தீர்ப்பு : சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்யக்கோரி, கேரளாவில் திரளான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

Advertisment

கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கியது. அதில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம். ஆணும் பெண்ணும் சமம் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருந்தது.

சபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக கேரளா பெண்கள் பேரணி :

உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் வரவேற்றும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் கேரள முதலமைச்சர் கோவிலுக்குள் பெண்கள் வர தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன எதிர்த்து கேரளாவில் உள்ள மக்கள் குறிப்பாக பெண்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மேலும் கடந்த சனிகிழமையன்று கோட்டயம் மற்றும் சங்கனாச்சேரியில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும், அதனை சீராய்வு செய்து மனு அளிக்கபோவதில்லை என கேரளா அரசு கூறியதை கண்டித்தும் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது.

Kerala Sabarimala Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment