/indian-express-tamil/media/media_files/K1UktFtRM9HnzkdSLEQn.jpg)
‘இன்று ப்ரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள்’ என்று சாக்ஷி மாலிக் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
பா.ஜ.க எம்.பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாலியால் புகார் அளித்தனர். பிரிஜ்பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில், அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் சிக்கிய பா.ஜ.க எம்.பி ப்ரிஜ்பூஷனின் மகன் கரன் பூஷனுக்கு பா.ஜ.க சார்பில் சீட் வங்கியது குறித்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷிமாலிக் தனது எக்ஸ் தளத்தில் பதிவுள்ளார்.
”நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை ப்ரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை. நீதியை மட்டுமே கோருகிறோம்.கைது செய்வதை விடுங்கள், இன்று ப்ரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.