Advertisment

கொலிஜியம் பரிந்துரைத்த 11 நீதிபதிகளில் 5 பேர் மட்டுமே இடமாற்றம்: மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

நீதிபதிகளை சரியான நேரத்தில் நியமிக்க வசதியாக ஏப்ரல் 20, 2021 அன்று உச்ச நீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடுவை “வேண்டுமென்றே கீழ்ப்படியாமை” என்று ஒரு மனுவில் கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
supreme court

உத்தரவில், கொலிஜியம் தனது பரிந்துரைகளை ஒருமனதாக வலியுறுத்தினால், மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

supreme-court-of-india | உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வதற்கான கொலிஜியம் பரிந்துரைகளை மத்திய அரசு தேர்வு செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (நவ.20) சுட்டிக் காட்டியது.

கொலிஜியம் பரிந்துரைத்த 11 நீதிபதிகளில், ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், ஆனால் ஆறு பேர் இன்னும் நிலுவையில் உள்ளனர்.

Advertisment

அதாவது, குஜராத் உயர்நீதிமன்றத்தில் 4 பேரும் அலகாபாத் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் தலா ஒருவரும் நிலுவையில் உள்ளனர்.

இந்த விவகாரத்தை, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

அப்போது நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், “எனது தகவலின்படி ஐந்து நீதிபதிகளுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள். ஆறு நீதிபதிகளுக்கு, நீங்கள் வழங்கவில்லை. அவர்களில் நான்கு பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த முறையும், இது நல்ல சமிக்ஞையை அனுப்பவில்லை என்று கூறியிருந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் கடந்த முறையும் யாரையும் தேர்ந்தெடுத்து இடமாற்றம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.

விசாரணையின் போது, பெஞ்ச் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தொடர்பான ஒரு பிரச்சனையை குறிப்பிட்டது. இந்த விவகாரத்தில், மீதமுள்ள 11 பெயர்களில், ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், ஆனால் ஆறு இடமாற்றங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், "கொலிஜியம் சார்பில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டையும் அதன் விளைவாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கையையும் நாங்கள் பாராட்டுகிறோம்" என்று பெஞ்ச் கூறியது.

நவம்பர் 7 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதித்துறைக்கு நியமனம் செய்ய கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளை மத்திய அரசு தேர்ந்தெடுத்து, தேர்வு செய்து, நியமிப்பது "சிக்கலானது" என்று கூறியது.

ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் நிலுவையில் இருப்பது குறித்தும் அது கவலை தெரிவித்திருந்தது.

முன்னதாக, நீதிபதிகளை சரியான நேரத்தில் நியமிக்க வசதியாக ஏப்ரல் 20, 2021 அன்று உச்ச நீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடுவை “வேண்டுமென்றே கீழ்ப்படியாமை” என்று ஒரு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவில், கொலிஜியம் தனது பரிந்துரைகளை ஒருமனதாக வலியுறுத்தினால், மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

ஆங்கிலத்தில் வாசிக்க : SC flags issue of ‘pick and choose’ by Centre in clearing names recommended by collegium for transfer of judges

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment