Advertisment

கனிமங்களுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி வரி அல்ல; 1989 தீர்ப்பில் தவறு: உச்ச நீதிமன்றம்

SC says its 1989 verdict incorrect | “கனிமங்களுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி வரி அல்ல” எனக் கூறிய உச்ச நீதிமன்றம், “1989 தீர்ப்பு தவறு” எனவும் கூறியது.

author-image
WebDesk
New Update
Muslim board to explore ways to overturn Supreme Court’s alimony verdict tamil news

உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வியாழக்கிழமை (ஜூலை 25), “அதன் 1989 அரசியலமைப்பு பெஞ்ச் தீர்ப்பு தவறானது என்று கூறியது. மேலும், “கனிமங்களுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி வரி அல்ல” என்றும் கூறியது.

Advertisment

உச்ச நீதிமன்றம், பெரும்பான்மை 8:1 தீர்ப்பில், அரசியலமைப்பின் விதிகளின் கீழ் கனிம உரிமைகள் மீது வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை என்று கூறியது.

தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், நீதிபதி பி வி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதாக கூறினார். 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் பிரிவு 9 இன் கீழ் ஒரு மாநிலம் கனிமங்கள் சுரங்கத்திற்கு வரி விதிக்க முடியுமா அல்லது அதன் அதிகாரம் குறைவாக இருந்தால், 'ராயல்டி' என்பது ஒரு வரியா என்பது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், 1989 ஆம் ஆண்டு கனிமங்கள் மீதான ராயல்டி என்பது ஒரு வரி என்று அதன் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு தவறானது என்று குறிப்பிட்டது.

1989 ஆம் ஆண்டில், 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், யூனியன் பட்டியலில் (பட்டியல் I) உள்ளீடு 54 இன் கீழ் எம்.எம்.டி.ஆர்.ஏ போன்ற பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களின்படி "சுரங்கங்கள் மற்றும் கனிம மேம்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில்" மையத்திற்கு முதன்மை அதிகாரம் உள்ளது என்று கூறியது.

மாநிலங்களுக்கு எம்.எம்.டி.ஆர்.ஏ. இன் கீழ் ராயல்டி வசூலிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது. மேலும் சுரங்கம் மற்றும் கனிம வளர்ச்சிக்கு மேலும் வரி விதிக்க முடியாது என்று கூறியது.

தொடர்ந்து நீதிமன்றம், “ராயல்டி ஒரு வரி என்று நாங்கள் கருதுகிறோம், மேலும் ராயல்டி மீதான செஸ் என்பது ராயல்டி மீதான வரி; இது, மாநில சட்டமன்றத்தின் தகுதிக்கு அப்பாற்பட்டது. மத்திய சட்டத்தின் 9 புலத்தை உள்ளடக்கியது” என்று கூறியது.

"ராயல்டி ஒரு வரி" என்ற சொற்றொடரின் பயன்பாடு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வழக்கிற்கு வழிவகுத்த தொடர்ச்சியான நிகழ்வுகளைத் தூண்டியுள்ளது.

ஆங்கிலத்தில் வாசிக்க : SC says its 1989 verdict ‘incorrect’, holds ‘royalty payable on minerals not a tax’

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment