பாலியல் வன்கொடுமைகளில் சிக்கியவர்களுக்கு இரு விரல் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு இன்னும் இரண்டு விரல் சோதனை நடத்தப்படுவதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த சோதனையை நடத்துபவர்கள் தவறான நடத்தைக்கான குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என்று திங்கள்கிழமை (அக்.31) உத்தரவிட்டது.
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இருவிரல் சோதனை அறிவியல் பூர்வமானது இல்லை" என்றும் "பெண்களை மீண்டும் பலிவாங்குவது மற்றும் மீண்டும் காயப்படுத்துவது மட்டுமே" என்று கூறிய நீதிபதிகள் "நடத்தப்படக்கூடாது" என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, “பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை என்று குற்றம் சாட்டப்படும் வழக்குகளில் இரண்டு விரல் பரிசோதனையைப் பயன்படுத்துவதை இந்த நீதிமன்றம் மீண்டும் மீண்டும் நிராகரித்துள்ளது.
பாலியல் செயலில் ஈடுபடும் பெண்ணை பலாத்காரம் செய்ய முடியாது என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும், உச்ச நீதிமன்றம், “ஒரு பெண்ணின் சாட்சியத்தின் தகுதி மதிப்பு அவளது பாலியல் வரலாற்றைச் சார்ந்தது அல்ல. ஒரு பெண் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறும்போது அதை நம்ப முடியாது என்று கூறுவது ஆணாதிக்க மற்றும் பாலியல் ரீதியானது.
பலாத்காரம் அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தை பெஞ்ச் கேட்டுக் கொண்டது.
சோதனைக்கு எதிரான அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த பரவலாக பரப்பப்பட வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil