தவறாக எழுதப்பட்ட பெயர்: 25 ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனை கைதிக்கு விடுதலை
1994 ஆம் ஆண்டு புனேவில் ரதி குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை படுகொலை தொடர்பாக நாராயண் சேத்தன்ராம் சவுத்ரி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் மரண தண்டனைக் கைதியை மீட்கும் நோக்கில், குற்றம் நடந்தபோது நாராயண் சேத்தன்ராம் சவுத்ரிக்கு 12 வயதே ஆனதைக் கண்டறிந்த உச்ச நீதிமன்றம் நேற்று திங்கள்கிழமை அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.
Advertisment
நீதிபதிகள் அனிருத்தா போஸ், கேஎம் ஜோசப், மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விரிவான உத்தரவில், குற்றம் சாட்டப்பட்டவர் இளமைக் குற்றச்சாட்டு உண்மை என்று முடிவு செய்து, இனிமேல் விடுவிக்கப்படுவார் என்று கூறினர்.
வழக்கு
1994 ஆம் ஆண்டு புனேவில் ரதி குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை படுகொலை தொடர்பாக நாராயண் சேத்தன்ராம் சவுத்ரி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 26, 1994 அன்று, நாராயணனும் அவரது கூட்டாளியும் புனேவில் உள்ள கோத்ருட்டில் உள்ள ரதி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். நாராயண் ரதிகளிடம் வேலைக்காரராக வேலை தேடினார். ஆனால் வேலை மறுக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது மூவரும் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.
நாராயண் சவுத்ரியின் தண்டனை மற்றும் சட்டப் போராட்டம்
இந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுத்ரி மற்றும் அவரது சக குற்றவாளியான ஜீதேந்திர நைன்சிங் கெலாட் ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர்.
அக்டோபர் 2016ல் கெலாட்டின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில், சவுத்ரி தனது மனுவை வாபஸ் பெற்று, அதற்குப் பதிலாக குற்றத்தின் போது சிறார் (18 வயதிற்கு கீழ்) என்ற அடிப்படையில் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
2000 ஆம் ஆண்டில் சவுத்ரியின் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த போதிலும், 2014 ஆம் ஆண்டு தீர்ப்புக்கு பிறகு அது மீண்டும் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டது. அந்த மனுவில் ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து மரண தண்டனை தீர்ப்புகளையும் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் உத்தரவிட்டது.
2018 ஆம் ஆண்டில், டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தை தளமாகக் கொண்ட ஒரு குற்றவியல் சீர்திருத்த வழக்கறிஞர் குழுவான ப்ராஜெக்ட் 39A இன் தலையீட்டுடன், சவுத்ரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
2019 ஆம் ஆண்டில், நீதிமன்றம் ஒரு நீதிபதியின் விசாரணை அறிக்கையைப் பெற்றது மற்றும் சவுத்ரிக்கு மரண தண்டனை வழங்கும் போது அவரது கல்வி பதிவுகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டது. மேலும், இந்த வழக்கை மூன்று ஆண்டுகளுக்கு மேல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில், நேற்று திங்களன்று, நீதிமன்றம் 68 பக்க தீர்ப்பை வழங்கியது. அதில், ராஜஸ்தான் மற்றும் புனேவைச் சேர்ந்த நாராயண் சவுத்ரியின் கல்வி பதிவேட்டைக் குறுக்கு சோதனை செய்ய நியமிக்கப்பட்ட விசாரணை நீதிபதி சமர்ப்பித்த அறிக்கையை குறிப்பிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவில், “பிக்கானரில் உள்ள ராஜ்கியா ஆதர்ஷ் உச்ச மதய்மிக் வித்யாலயா வழங்கிய சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, குற்றத்தின் போது அவரது வயதை நிர்ணயிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நாங்கள் அறிவிக்கிறோம். அந்தச் சான்றிதழின்படி, குற்றச் செயலின் போது அவரது வயது 12 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள். எனவே, அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட தேதியில் அவர் குழந்தை/இளைஞராக இருந்தார். 2015 சட்டத்தின் விதிகளின்படி. இது நாராயண் என விசாரிக்கப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிரணராமின் உண்மையான வயது என்று கருதப்படும்." என்று கூறி அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
சவுத்ரி ஜலப்சரில் உள்ள ராஜ்கியா ஆதர்ஷ் உச் மத்யமிக் வித்யாலயாவின் பதிவு, மே 15, 1989 அன்று 3 ஆம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டதாகக் காட்டியது. சுமார் 25 ஆண்டுகளாக மரண தண்டனையில் சிறையில் இருந்தவாறு அவர் மராத்தியையும் ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டு, சமூகவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.
சவுத்ரியின் விடுதலை தொடர்பாக ப்ராஜெக்ட் 39A-ன் இயக்குனர் அனுப் சுரேந்திரநாத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், சவுத்ரி தற்போது நாக்பூரில் உள்ள சிறையில் இருக்கிறார். "புனே செஷன்ஸ் நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்டவுடன், நாக்பூர் சிறை அவரை விடுவிக்கும்," என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil