Advertisment

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகள்: தனி அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை!

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தனி அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகள்: தனி அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை!

கர்நாடகா கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு மாணவர்களிடையே போராட்டம் வெடித்தது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடந்தன.

Advertisment

இதையடுத்து அரசின் உத்தரவை எதிர்த்து மாணவிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்ப்டடது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "கல்வி நிலையங்களில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடை அணிந்து வர கூடாது. ஹிஜாப் அணிவது இஸ்லாமியத்தில் கட்டாயம் இல்லை" என கடந்த மார்ச் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா மனுதாரர் சார்பில் ஆஜராகி, மார்ச் மாதம் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இன்னும் விசாரணைக்கு பட்டியலிடப்பட வில்லை எனத் தெரிரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், "மாணவிகள் இதனால் படிப்பை இழந்து வருகிறார்கள். சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்" என்று கூறினார்.

தலைமை நீதிபதி என். வி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வில் இதுகுறித்து முறையிடப்பட்டது. அப்போது, தலைமை நீதிபதி என். வி ரமணா, "இந்த வழக்கை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும். தற்போது ஒரு நீதிபதிக்கு உடல்நிலை சரி இல்லை. அதனால் தான் தாமதம். அந்த அமர்வு ஹிஜாப் விவகாரத்தில் அடுத்தக்கட்ட முடிவை எடுக்கும்" என்று தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hijab Row Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment