/tamil-ie/media/media_files/uploads/2018/09/2-38.jpg)
பள்ளி முதல்வர்
பீகாரில 5 ஆம் வகுப்பு மாணவியை 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து, பள்ளி முதல்வர் மற்றும் கிளர்க் கர்ப்பமாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி முதல்வரின் கொடூரச் செயல்:
சமீப காலமாக நாட்டில் பெண் குழந்தைகளுக்கு நேரும் கொடுமைகள் யவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லா தரப்பிலிருந்தும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளில் ஆளாவது பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியை தந்து வருகிறது.
இதோ பீகார் மாநிலத்தில் பள்ளிக்கு படிக்கு சென்ற சிறுமி, பள்லி முதல்வர் மற்றும் கிளர்க்காலே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 9 மாதங்களாக அந்த சிறுமியை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி அந்த சிறுமி திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த செய்தி சிறுமியின் பெற்றோர்களுக்கு இடிப்போல் விழுந்துள்ளது. பின்பு சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் பள்ளியின் முதல்வர் மற்றும் அவரது உதவியாள என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தை அவர்கள் இருவரும் செல்போனில் வீடியோவாக எடுத்து சிறுமியை மிரட்டியுள்ளது வெட்ட வெளிச்சமாகியது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி முதல்வர், கிளர்க்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.