Advertisment

ஆசியாவிலேயே மிக நீண்ட இரு திசை சுரங்கபாதை...அடிக்கல் நாட்ட இருப்பவர் யார் தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆசியாவிலேயே மிக நீண்ட இரு திசை சுரங்கபாதை...அடிக்கல் நாட்ட இருப்பவர் யார் தெரியுமா?

காஷ்மீரில் அமையவுள்ள ஆசியாவிலேயே மிக நீண்ட இரு திசை சுரங்கபாதையான  ஜோஜிலா சுரங்கப்பாதைக்கு  பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகருக்கு செல்கிறார். “ஸ்ரீநநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்படவுள்ள ஜோஜிலா சுரங்கப்பாதைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மோடி, காஷ்மீர் வர உள்ளதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் முழுவதும் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.  அதன் பின்பு, மோடி ஷெர்–இ–காஷ்மீர் வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து 330 மெகாவாட் கிஷண் கங்கா மின் உற்பத்தி திட்டத்தை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணிக்கவுள்ளார்.

publive-image

சுமார் 14 கிலோமீட்டர் தூரத்துக்கு   ஜோஜிலா சுரங்கப்பாதை அமையவுள்ளது. ரூ.6,800 கோடி செலவில் இது அமைகிறது. ஸ்ரீநகர், கார்கில், லே பகுதிகளை இணைக்க இது உதவும். இந்த சுரங்கப்பாதை செயல்பாட்டுக்கு வரும்போது ஜோஜிலா கணவாய்ப் பகுதியை வெறும் 15 நிமிடங்களில் கடந்துவிடமுடியும். தற்போது இதன் பயண நேரம் மூன்றரை மணி நேரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Narendra Modi Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment