Advertisment

பல்கலை.க்கு ஆளுநர் பரிந்துரைத்த பெயர்கள் ரத்து: கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கேரள ஆளுநருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அவர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ker Gov Arif.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சி.பி.எம் மற்றும் அதன் மாணவர் பிரிவு ஆளுநரால் தேர்வு செய்யப்பட்ட 4 மாணவர்கள் சங்க பரிவாரால் பரிந்துரைக்கப்பட்ட ஏ.பி.வி.பி செயல்பாட்டாளர்கள் என்று குற்றஞ்சாட்டியது.

Advertisment

பல்கலைக்கழகங்கள் தொடர்பான விவகாரங்களில் கேரளா சி.பி.எம் அரசாங்கத்துடன் தொடர்ந்து முரண்பட்டு வரும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு கேரள பல்கலைக்கழக செனட்டிற்கு அவர் பரிந்துரைத்த 4 பேரின் பெயர்களையும் கேரள உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

சிபிஎம் மற்றும் அதன் மாணவர் பிரிவு, ஆளுநர் பரிந்துரைத்த 4 மாணவர்களும் ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியின் செயல்பாட்டாளர்கள் என்றும், அவர்கள் சங்பரிவாரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் என்றும் குற்றம் சாட்டினர். ஆளுநர் பரிந்துரைத்தவர்களுக்கு சிறந்த கல்வித் தகுதி இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, பல்கலைக் கழகத்தில் இருந்து ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்த மாணவர்களில், பின் ஆளுநர் பரிந்துரைத்த பட்டியலில் வேறு மாணவர் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக கூறி நீதிமன்றத்தை அணுகினர்.

ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களைக் குறிப்பிடுகையில், "நியமிக்கப்பட்ட மாணவர்களின் எந்த ஒரு காரணியும் மனுதாரர்களின் பெயரை விட உயர்ந்ததாகக் காட்டப்படவில்லை" என்று நீதிமன்றம் கூறியது.

ஆறு வாரங்களுக்குள் புதிதாக மாணவர்கள் பட்டியல் தயார் செய்து தாக்கல் செய்ய கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நீதிபதி முகமது நியாஸ் சி.பி அடங்கிய அமர்வு கூறுகையில், “ மாணவர்கள் தேர்வு செய்யும் போது அதிபருக்கு (ஆளுநர்) கட்டுப்பாடற்ற அதிகாரம் இல்லை என்பது சாதாரண விஷயம். நியமனம் சட்டத்தின் தேவைக்கு முரணாக இருந்தால் அல்லது பொருத்தமான காரணிகள் பரிசீலிக்கப்படாவிட்டால் அல்லது முடிவெடுப்பதில் பொருத்தமற்ற காரணிகள் கருதப்பட்டால், நியமனங்கள் அரசியலமைப்பு நீதிமன்றங்களால் தலையிடப்படும் என்று கூறியது. 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/thiruvananthapuram/in-setback-to-kerala-governor-nominations-he-made-to-university-are-quashed-by-high-court-9343628/

எந்தவொரு தன்னிச்சையான அதிகாரத்தைப் பயன்படுத்துவது அரசியலமைப்பின் 14-வது பிரிவில் உள்ள சமத்துவ விதியை மட்டுமல்ல, பிரிவு 16-ல் உள்ளமைக்கப்பட்ட 'பாகுபாடு' விதியையும் மீறுவதாக நீதிபதி கூறினார். 

எந்தவொரு விருப்பமான அதிகாரத்தைப் பயன்படுத்தும்போதும் கூட, நியாயத்தன்மை, பகுத்தறிவு, பாரபட்சமற்ற தன்மை, நியாயம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் தேவைகள் அத்தகைய பயிற்சியில் இயல்பாகவே உள்ளன, மேலும் எந்தவொரு தனிப்பட்ட கருத்துக்கும் ஏற்ப இருக்க முடியாது, ”என்று நீதிமன்றம் கூறியது.

தீர்ப்பு குறித்து கேரள உயர்கல்வி அமைச்சர்ஆர்.பிந்து கூறுகையில்,  இந்த தீர்ப்பு தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன். "மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், கல்வித் துறையில் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாக்கவும்" மாநில அரசு செயல்படுகிறது என்றும் கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    kerala High court
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment