Advertisment

அடுத்த மூவ் என்ன? கட்சிக்குப் புதிய பெயர், சின்னம் தேர்ந்தெடுப்பது சரத் ​​பவாரின் உடனடி பணி

புதன்கிழமை மாலை 4 மணிக்குள் கட்சிக்கு புதிய பெயருக்கான 3 விருப்பங்களை வழங்க பவாருக்கு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Sharad Pawar NCP.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தேசியவாத காங்கிரஸ் கட்சி  (என்.சி.பி) பெயர் மற்றும் அதன் தேர்தல் சின்னமான கடிகாரச் சின்னத்தை அஜித் பவார் தலைமையிலான குழுவுக்கு ஒதுக்கி நேற்று (பிப்.6) தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், சரத் ​​பவார் தனது அணியின் புதிய பெயர் மற்றும் சின்னத்தை இன்று (பிப்.7) புதன்கிழமை அறிவிப்பார் என்று கூறப்பட்டது. மேலும், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் எனவும் சரத் ​​பவார் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

சரத் ​​பவார் அணி தரப்பில் கூறுகையில், புதிய கட்சிப் பெயரில் "தேசியவாதம்" மற்றும் "காங்கிரஸ்" ஆகிய வார்த்தைகள் அடங்கியதாக இருக்கும். "உதய சூரியன்", "சக்கரம்" மற்றும் "டிராக்டர்" ஆகியவை கட்சியின் புதிய சின்னத்திற்கான விருப்பங்களாக இருக்கும். பிப்ரவரி 27-ம் தேதி மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல்கள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதால், புதன்கிழமை மாலை 4 மணிக்குள் பவார்  அணியை புதிய கட்சிப் பெயர், சின்னம் குறித்து 3 பரிந்துரைகளை வழங்க தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

“வரும் ராஜ்யசபா தேர்தலுக்கான புதிய கட்சி பெயரையும் சின்னத்தையும் முடிவு செய்யும்படி தேர்தல் ஆணையம் எங்களிடம் கூறியுள்ளது. நாளை (புதன்கிழமை) அதைச் செய்வோம், ”என்று சரத் பவாரின் மகள் மற்றும் பாராமதி தொகுதி மக்களவை எம்.பி சுப்ரியா சுலே கூறினார்.

சரத் பவாரின் 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அவர் குறைந்தது நான்கு வெவ்வேறு தேர்தல் சின்னங்களில் தேர்தலில் போட்டியிட்டார். ஜோடி காளைகள், சர்க்கா (சுழலும் சக்கரம்), பசு மற்றும் கன்று, கை சின்னம் மற்றும் கடிகாரம் ஆகிய சின்னங்களில் நின்று போட்டியிட்டார். என்.சி.பியை நிறுவுவதற்கு முன்பு, அவர் காங்கிரஸ், காங்கிரஸ் (ஆர்), காங்கிரஸ் (யு), காங்கிரஸ் (சோசலிஸ்ட்), மற்றும் காங்கிரஸ் (ஐ) போன்ற கட்சிகளில் இருந்தார்.

பவார் குழு புதிய பெயரையும் சின்னத்தையும் பெற முயற்சிக்கும் நிலையில், இரு என்.சி.பி குழுக்களின் எம்.எல்.ஏக்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுக்களில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாததால், சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர் முன் ஒரு போராட்டம் காத்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 31ஆம் தேதி முடிவடைந்து, பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இது கண்ணுக்கு தெரியாத சக்தியின் வெற்றி. கட்சியை நிறுவியவர் தோல்வியை சந்தித்து வருகிறார். ஆனால் இது எனக்கு விசித்திரமாக தெரியவில்லை. சிவசேனாவுக்கு எதிராக வந்த உத்தரவையும் நாங்கள் பார்த்தோம். தாக்கரே குடும்பத்துக்கு எதிராகவும் இதே சதித்திட்டம் தீட்டப்பட்டது. இது மகாராஷ்டிராவுக்கு எதிரான சதி. இந்த முடிவு எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இல்லை. இந்தக் கட்சியை பூஜ்ஜியத்தில் இருந்து உயர்த்தினார் சரத் பவார், மீண்டும் எழுப்புவோம்” என்று கூறிய சுலே,  கட்சி யாருடையது என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் என்றார்.

சுலேவைத் தொடர்ந்து சரத் பவார் அணி மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், “தேர்தல் ஆணையத்தின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம். அனைத்து அரசியலமைப்பு அமைப்புகளும் தங்கள் சுயாட்சியை இழந்துவிட்டன என்பதை இந்த உத்தரவு நிரூபிக்கிறது மற்றும் சில தொழில்நுட்ப சிக்கல்களை வெறுமனே முன்வைப்பதன் மூலம் முதன்மையான ஒழுங்கு உள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதி வழங்கும் என்று நம்புகிறோம்” என்றார். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/sharad-pawar-choosing-new-party-name-symbol-immediate-task-9147879/

முன்னதாக, மகா துணை முதல்வரும், என்.சி.பி தலைவருமான அஜித் பவார், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை வரவேற்றுப் பேசினார். ஆணையத்தின் இந்த உத்தரவை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். எங்கள் ஆலோசகர்கள் வழங்கிய ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது, நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ncp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment