Advertisment

மகாராஷ்டிரா முதல்வர் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள்; பா.ஜ.க உடன் இணைந்து ஆய்வு செய்த சிவசேனா, என்.சி.பி

கூட்டணிக்குள் எந்த சர்ச்சையும் இல்லை; பா.ஜ.க.,வுடன் இணைந்து மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த சிவசேனா, என்.சி.பி; முக்கிய துறைகளை குறிவைக்கும் ஏக்நாத் ஷிண்டே

author-image
WebDesk
New Update
maha asad ground

இன்று ஆசாத் மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்வு குறித்து மூன்று கட்சிகளின் தலைவர்களும் ஆய்வு செய்தனர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி மற்றும் இலாகாக்களை பகிர்ந்து கொள்வதில் தொடர்ந்து மோதல் நிலவி வரும் நிலையில், மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்வதற்காக மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவான்குலே தலைமையிலான குழுவுடன் சிவசேனா தலைவர்கள் செவ்வாய் கிழமை சேர்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Shiv Sena, NCP leaders join BJP’s Bawankule to inspect swearing-in ceremony site: ‘allies equally involved’

முதல்வரின் பதவியேற்பு விழா டிசம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
செவ்வாய்கிழமை காலை, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா தலைவர்களான குலாப்ராவ் பாட்டீல், சஞ்சய் ஷிர்சத் மற்றும் அஜித் பவார் தலைமையிலான என்.சி.பி.,யின் தனஞ்சய் முண்டே மற்றும் ஹாசன் முஷ்ரிப் ஆகியோருடன் பவான்குலே ஆசாத் மைதானத்திற்கு வந்து தளவாடங்கள், இருக்கை திறன், கூட்டத்தை நிர்வகித்தல் உள்ளிட்ட திட்டங்களை விவாதித்தார். .

பவான்குலே கூறுகையில், “அரசாங்கம் அமைப்பதற்காக மூன்று கட்சிகளும் இணைந்து செயல்படுகின்றன. கூட்டணிக் கட்சிகளான சிவசேனாவும் என்.சி.பி.,யும் சமமாக பங்கேற்று, ஏற்பாடுகளில் எங்களுக்கு உதவுகின்றன.”

Advertisment
Advertisement

இதேபோன்ற உணர்வுகளை சிவசேனாவின் ஷிர்சட் எதிரொலித்தது. "எந்த சர்ச்சையும் இல்லை," என்று கூறினார்.

மாலையில், காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ.க தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் என்.சி.பி தலைவர் அஜித் பவார் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நடைபெறுகிறது. மஹாயுதி அரசாங்கத்தில் அமைச்சரவை அமைப்பு மற்றும் அதிகார அமைப்பு தொடர்பான பிரச்சனைகளை முறைப்படுத்துவதற்காக இந்த கூட்டம் நடைபெறுவதாக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

சிவசேனாவின் முன்னாள் அமைச்சர் ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாமல், “நவம்பர் 23 அன்று முடிவு வெளியான அன்று ஷிண்டே மகாயுதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். இந்த வேறுபாடுகள் பற்றிய பேச்சுக்கள் அனைத்தும் வெறும் கணிப்புகள் மட்டுமே. சில சமயங்களில், கூட்டணி கட்சிகள் தாங்கள் வருத்தப்பட்டதாகக் காண்பிக்க வேண்டும். நீங்கள் வலியுறுத்தாத வரை, நீங்கள் கடுமையாக பேரம் பேச முடியாது” என்று கூறினார்.

மகாராஷ்டிரா முதல்வர் பதவி கிடைக்காததால் சமரசம் செய்து கொண்ட சிவசேனா, மாநில உள்துறையை கைப்பற்ற முயற்சித்து வருகிறது. உள்துறை அமைச்சகம் இல்லையென்றால், ஷிண்டே தலைமையிலான கட்சி சமமான முக்கியமான வருவாய் துறையை குறிவைக்கும் என்று கூறப்படுகிறது.

திங்கள்கிழமை இரவு, பா.ஜ.க தூதுவர் கிரிஷ் மகாஜன், ஷிண்டேவை தானேவில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க அனுப்பப்பட்டார் - டிசம்பர் 5 ஆம் தேதி பதவியேற்பு வரை அரசாங்கம் அமைக்கும் செயல்முறை காத்திருக்க முடியாது என்ற செய்தியை தெரிவிக்கும் முயற்சியாக இருந்தது. மேலும் சிவசேனா முன் வந்து பங்கேற்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அரசாங்கத்தில் தங்கள் கூட்டணி தர்மத்தை மதிப்பதாக பா.ஜ.க.,வும் உறுதியளித்தது.

மகாராஷ்டிரா சட்டசபையில் மொத்தமுள்ள 288 இடங்களில் 230 இடங்கள் கிடைத்துள்ள நிலையில், பதவியேற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த பா.ஜ.க விரும்புகிறது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க முதல்வர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். சிவசேனா (யு.பி.டி) தலைவர் உத்தவ் தாக்கரே, என்.சி.பி (எஸ்.பி) தலைவர் சரத் பவார் மற்றும் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படும் என்று கூட்டணியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க தலைமையிலான மஹாயுதிக்கு மிகப்பெரிய பெரும்பாண்மையை வழங்கிய பெண்களின் அமோக ஆதரவை அங்கீகரிக்கும் வகையில், லட்கி பஹின் யோஜனாவின் 2,000 பெண் பயனாளிகளும் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்படுவார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment