உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, நீண்ட கால சிறை காவல் மற்றும் வழக்கின் விசித்திரமான உண்மைகளைக் கருத்தில் கொண்டு பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கியது. விசாரணை நீதிமன்றத்திற்கு, 'தகுந்ததாக கருதும் நிபந்தனைகளில் அவரை விடுவிக்க வேண்டும்' என உத்தரவிட்டார். மேலும், உரிய நிபந்தனைகளுடன் அவரை விடுவிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி உத்தரப் பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு சித்திக் கப்பனை மூன்று நாட்களுக்குள் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணை நீதிமன்றம் உரிய நிபந்தனைகளின் அடிப்படையில் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, பதிவு செய்யப்பட்ட சில ஆவணங்கள் மூலம் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. “இந்த கட்டத்தில், வழக்கு விசாரணையின் முன்னேற்றம் மற்றும் வழக்குத் தொடர்பாக சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கையாள்வதிலிருந்தும் கருத்து தெரிவிப்பதிலிருந்தும் நாங்கள் விலகி இருக்கிறோம். ஏனெனில், இந்த விவகாரம் குற்றஞ்சாட்டப்படும் நிலையில் உள்ளது” என்று அமர்வு கூறியது.
இருப்பினும், மேல்முறையீடு செய்தவரின் சிறையில் இருந்த காலத்தின் அளவு மற்றும் வழக்கின் விசித்திரமான உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்குவதாக உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.
சித்திக் கப்பன் விடுதலையான பிறகு முதல் 6 வாரங்கள் டெல்லியில் தங்கி இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த காலத்திற்குப் பிறகு, அவர் கேரளாவுக்குச் சென்று சுதந்திரமாக இருக்கலாம். அங்கே அவர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.
மேலும், நீதிமன்றம் அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறும், சர்ச்சையில் தொடர்புடைய எவரையும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.
சித்திக் கப்பனுக்கு எதிரான அமலாக்கத்துறை இயக்குநரகம் தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதாக சித்திக் கப்பனின் மனைவி ரைஹானா சித்திக் கூறினார். அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் வழக்கில் சித்திக் கப்பனுக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த வழக்கு உபா (UAPA) வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டப் போராட்டத்தில் என்னோடும் எனது குடும்பத்தினரோடும் நின்ற அனைவருக்கும் நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் அனுபவித்த அதிர்ச்சியை எங்களால் விளக்க முடியாது” என்று அவர் கூறினார்.
சித்திக் கப்பனும் மற்றவர்களும் அக்டோபர் 5, 2020 அன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுராவிலிருந்து ஹத்ராஸுக்குச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டனர். ஹத்ராஸில் ஒரு தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சித்திக் கப்பன் சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கப் போவதாகக் கூறியபோது, சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பயங்கரவாத கும்பல் திட்டமிட்டு பத்திரிகையாளரின் பயணத்திற்கு நிதியுதவி செய்ததாக போலீசார் வாதிட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.