சிக்கிமில் உள்ள செமாவில் சாட்டன் என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்ற விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு சிக்கிம் பகுதியில் உள்ள செமாவில் சாட்டம் என்ற இடத்திலிருந்து தாங்கு பகுதிக்கு சென்றபோது, பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் வேன் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் சிக்கில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது “ இந்த விபத்து செய்தி வேதனையளிக்கிறது. ராணுவ வீரர்களை இழந்து வாழும் அவர்களது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.