நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்: ஊழியரை சுட்டுக் கொன்று பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்

இரத்த வெள்ளத்தில் இருந்த சந்தோஷ் குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இரத்த வெள்ளத்தில் இருந்த சந்தோஷ் குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்: ஊழியரை சுட்டுக் கொன்று பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்

டெல்லியில் உள்ள பிரபல வங்கியில்  நெஞ்சை உறைய வைக்கும் வகையில் நடந்த வங்கிக் கொள்ளையின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Advertisment

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் கார்ப்பரேஷன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.  பிரதான இடத்தில் உள்ள  வங்கி என்பதால் நாள் தோறும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த வங்கியில் நடந்த துணிகர கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

வங்கிக் கொள்ளை சிசிடிவி காட்சிகள்:

நெஞ்சை பதைபதைக்கு இந்த காட்சிகளில்  கொள்ளையர்கள்  வங்கி காஷியரை  சரமாரியாக சுட்டுத் தள்ளும் காட்சிகள் பார்பவர்களையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று (12.9.18) பிற்பகல், வங்கியில்  ஊழியர்கள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தனர். அப்போது முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்தவாறு 6 பேர் கொண்ட கும்பல் திடீரென்று வங்கிக்குள் நுழைந்தது.

Advertisment
Advertisements

வங்கியினுள் அமர்ந்திருந்த  வாட்ச் மேனை முதலில் அடித்து அவரிடமிருந்த துப்பாக்கினை பறித்தனர்.  பின்பு வங்கியில் இருந்த அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி தரையில் அமர வைத்தனர். இதனைத்தொடர்ந்து வங்கியின் கேஷியர் சந்தோஷ் குமாரிடம் சென்ற கொள்ளையர்கள் அவரை துப்பாக்கி காட்டி மிரட்டி  2லட்ச ரூபாய் பணத்தை  கொள்ளையடிக்க முயன்றனர்.

சந்தோஷ் குமார் பணத்தை எடுத்து தந்தவுடன், அவரை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.  கொள்ளையர்கள் சென்றவுடன், ஊழியர்கள் உடனடியாக காவல் துறைக்கு போன் செய்து விட்டு, இரத்த வெள்ளத்தில் இருந்த சந்தோஷ் குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலியே அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுக்குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையின் திவீர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும், கொள்ளையர்களை பிடிக்க காவல் துறை சார்பில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Delhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: