Advertisment

அத்வானி ரத யாத்திரையின் 33 ஆண்டுகளுக்குப் பிறகு; சோம்நாத்திலிருந்து ராமர் கோயிலுக்கான மற்றொரு பிரச்சாரம்

இதுபோன்ற புத்தகங்களில் ராமரின் பெயரை பொறிக்கும் ஒவ்வொரு பக்தருக்கும் உணவு வழங்க தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்று அறக்கட்டளை கூறியது.

author-image
WebDesk
New Update
somnath

Photo credit: somnath.org

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலின் வளாகத்தில் அமைந்துள்ள ராமர் கோவிலில் பக்தர்கள் ராமர் பெயரை குறிப்பேடுகளில் பொறிக்கும் ராம் நாம் மந்திர லேகன் யக்ஞம்பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 30 அன்று காந்திநகரில் தொடங்கி வைத்தார்.

Advertisment

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி திறப்பு விழாவிற்காக இந்த குறிப்பேடுகள் அனுப்பி வைக்கப்படும்.

அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக சோம்நாத்தில் இருந்து ராம ரத யாத்திரையை பாஜக தலைவர் எல்.கே.அத்வானி வழிநடத்தி33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பிரச்சாரம் வந்துள்ளது. அக்டோபர் 23, 1990 அன்று பீகாரில் அப்போதைய லாலு யாதவ் அரசால் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த யாத்திரை திடீரென முடிவுக்கு வந்தது.

கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவிலையும், சில கோவில்களையும் நிர்வகிக்கும்- ஸ்ரீ சோம்நாத் கோவில் அறக்கட்டளை- சோம்நாத்தில் உள்ள ராமர் கோவிலில், பக்தர்கள் ராமரின் பெயரை எழுதுவதற்காக 10 நோட்டு புத்தகங்களை வைத்துள்ளது.

ராம ஜென்மபூமி பாபரி மசூதி உரிமை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, இந்த அறக்கட்டளை தனது சொந்த ராமர் கோவிலை சோம்நாத் கோவிலுக்கு எதிரே திரிவேணி சங்கம் அருகே  கட்டி, 2017ல் திறந்து வைத்தது.

அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சோம்நாத் கோயிலில் இருந்து அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அவ்வப்போது (அல்லது சீரான இடைவெளியில்) பக்தர்களை அழைத்துச் செல்ல பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்கு ராமரின் பெயரை எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு புத்தகங்கள்- பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற புத்தகங்களில் ராமரின் பெயரை பொறிக்கும் ஒவ்வொரு பக்தருக்கும் உணவு வழங்க தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்று அறக்கட்டளை கூறியது.

குஜராத்தில் உள்ள பாஜக தலைவர்கள் இந்த பிரச்சாரத்தை ஜனவரி 24 அன்று ஒவ்வொரு கிராமத்திலும் "கொண்டாட்டத்தின் சூழ்நிலையை" உருவாக்கும் கட்சியின் முயற்சிகளின் ஒரு பகுதியாக கருதுகின்றனர்.

முன்னாள் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளரும், மாநில பாஜக செயலாளருமான வெராவலைச் சேர்ந்த ஜவேரிபாய் தக்ரர் கூறுகையில்: ராமர் அனைவரின் இதயங்களிலும் வாழ்கிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா 576 ஆண்டு கால போராட்டத்தின் வெற்றியாகும். மக்களிடையே இந்துத்துவா உணர்வைத் தூண்டுவதற்காக அத்வானி, ராம் ரத யாத்திரையைத் தொடங்கினார், அந்த முயற்சி இன்னும் தொடர்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும்.

அறக்கட்டளை, முயற்சிகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

நாடு முழுவதும் ராமில் மூழ்கிய சூழ்நிலையை உருவாக்க நாங்கள் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளோம். ராமர் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் நம்பிக்கையின் சின்னம். எனவே, கோவில் திறப்பு விழா அரசியல் அல்லது மத நிகழ்ச்சியாக இருக்காது.

இது ஒரு கலாச்சார நிகழ்வா, அரசியல் நிகழ்வா, மத நிகழ்வா அல்லது ராம ராஜ்ஜியத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் நிகழ்வா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும், என்று அவர் மேலும் கூறினார்.

அறக்கட்டளை செயலாளரும், முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தில் சிறப்புப் பணியில் உள்ள அதிகாரியுமான யோகேந்திர தேசாய் கூறுகையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் அதிகபட்சமாக மக்களை இணைக்க வேண்டும் என்ற முக்கிய யோசனையுடன் இந்த பிரச்சாரம் வகுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது, அதை நேரில் பார்க்க அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால் அது முடியாமல் போகலாம். பிறகு எப்படி பகவானை அடைய முடியும்? பகவானின் நாமத்தை உச்சரிப்பதன் மூலம்.

ராமர், லக்ஷ்மணன் மற்றும் ஜானகி பிரபாஸ் க்ஷேத்திரத்திற்கு (சோம்நாத் கோவிலின் பகுதி) வந்திருந்தனர், அது ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 7 லட்சம் ராம நாமம் பக்தர்களால் எழுதப்பட்டுள்ளன. பிரச்சாரம் மக்களை வெகுவாகத் தொட்டுள்ளது, என்று தேசாய் கூறினார்.

இந்த முயற்சியை வரவேற்ற, குஜராத்தில் உள்ள விஷ்வ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் ஹிதேந்திரசிங் ராஜ்புத் கூறுகையில்: மக்களின் நம்பிக்கை அந்த இடத்துடன் தொடர்புடையது.

சோம்நாத், முதல் ஜோதிர்லிங்கம் மற்றும் பிரதமர் மோடி அறக்கட்டளையின் தலைவர். அவருடைய நம்பிக்கை அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மற்றும் சோம்நாத் கோயில்களுடனும் தொடர்புடையது... அரசியல் சாசனப் பதவியில் அமர்ந்திருக்கும் ஒரு அரசியல் நபர் இதைத் தொடங்குவது மிகவும் அதிர்ஷ்டம். இது ஒரு பெரிய விஷயம்.

முன்பெல்லாம் மக்கள் சனாதன தர்மத்தை விட்டு ஓடி வந்தனர். இது பெருமைக்குரிய விஷயம், என்றார்.

சௌராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், ராமர் கோயில் திறப்பு விழா நாள் நெருங்கி வருவதால், ராம் நாம மந்திர லேகன் யக்ஞ பிரச்சாரம் ஒரு மாற்றத்தைக் காணும். இது இப்போது அறக்கட்டளையின் ஒரு சிறிய முயற்சியாக இருக்கலாம். ஆனால் கோவில் திறப்பு விழா நாளுக்கு அருகில், அது ஒரு பெரிய அணிதிரட்டல் கருவியாக மாறும், என்று கூறினார்.

Read in English: 33 years after Advani’s Rath Yatra in 1990, another campaign for Ram temple begins from Somnath

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ayodhya Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment