Advertisment

திருமணம் செய்ய வற்புறுத்தல்: காதலனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததாக இளம்பெண் கைது

தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறி, முன்னாள் காதலனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக, 17 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருமணம் செய்ய வற்புறுத்தல்: காதலனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததாக இளம்பெண் கைது

ஹரியானா மாநிலத்தில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறி, முன்னாள் காதலனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக, 17 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

ஹரியானா மாநிலம், சோனேபாட்டில் உள்ள கிராமமொன்றில் இச்சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

19 வயது இளைஞன் தீபக் குமார், தன் குடும்பத்துக்கு சொந்தமான விவசாய வெள்ளத்தில் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். அதனை அவரது தந்தை கண்டறிந்தார்.

இதையடுத்து, தீபக் முமாருக்கு காதலி (17 வயது) இருப்பது தெரியவரவே, இக்கொலை சாதி ஆணவ படுகொலையாக இருக்கலாம் என சந்தேகித்து, அப்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பெண்ணின் வளையல் துண்டுகள் இருப்பது தெரியவரவே, அவரது காதலியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தான் கொலை செய்ததை அப்பெண் ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பெண் சிறார் சீர்திருத்த பள்ளியில் அனுப்பி வைக்கப்பட்டார்.

தனக்கு பெற்றோர் வேறொரு இடத்தில் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்த நிலையில், தீபக் குமார் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதால் துப்பாக்கியால் சுட்டு அவரை கொலை செய்ததாக, அப்பெண் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

Haryana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment