சமாஜ்வாடி கட்சி (SP) தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோருடன், ரேபரேலி எம்பி சோனியா காந்தி வெள்ளிக்கிழமை தனது தொகுதி மக்களிடம், தனக்கு கொடுத்த அதே பாசத்தை தன் மகனுக்கு காட்டுமாறு கேட்டுக் கொண்டார்.
ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைய ஒரு நாள் முன்னதாக, அமேதி மற்றும் ரேபரேலியில் உச்சகட்ட பிரச்சாரம் நடந்தது. ரேபரேலியில் சோனியா மற்றும் பிரியங்காவுடன் இணைந்து ராகுலுக்காக பிரச்சாரம் செய்த அகிலேஷ், அமேதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மாவுக்கும் வாக்கு சேகரித்தார்.
“உங்கள் அன்பு என்னை ஒருபோதும் தனிமைப்படுத்தவில்லை. என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். என்னை எப்படி உங்களின் சொந்தமாக நினைத்தீர்களோ, இனி ராகுலை உங்களுடையவனாக பார்க்க வேண்டும். அவர் உங்களை ஏமாற்ற மாட்டார்.
ரேபரேலி என்னை 30 ஆண்டுகள் பணியாற்ற அனுமதித்தது, இது எனது வாழ்க்கையின் "மிகப்பெரிய சொத்து. எனது குடும்பம் தொகுதியுடன் 100 வருட தொடர்பு கொண்டிருந்தது”, என்று அவர் கூறினார்.
ராகுலுக்கு "சாதனை வெற்றியை" உறுதி செய்யுமாறு வாக்காளர்கள், சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளின் தொழிலாளர்களையும் அகிலேஷ் வலியுறுத்தினார். ரேபரேலியில் பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கிற்கு நில மாஃபியாவுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
"புல்டோசர் யுக்தி"க்காக பாஜகவை கிண்டல் செய்த அகிலேஷ், வெள்ளிக்கிழமை பாஜக கட்சியில் இணைந்த SP எம்எல்ஏ மனோஜ் பாண்டே , பாஜக ஆகியோருக்கு தகுந்த பதிலடி கொடுக்க "தங்கள் வாக்குகளை புல்டோசராக பயன்படுத்துங்கள்" என்று ரேபரேலி மக்களை கேட்டுக் கொண்டார்.
எங்கள் இரண்டாவது துரோகியும் அங்கு சென்றுள்ளார் என்பது எங்களுக்குத் தெரிந்தது, என்று உஞ்சஹர் எம்எல்ஏவைப் பற்றி அகிலேஷ் கூறினார்.
முன்னதாக, அமேதியில் காங்கிரஸ் வேட்பாளர் சர்மாவுக்காக பிரச்சாரம் செய்த அகிலேஷ், பாரதிய ஜனதா கட்சியால் அமேதியில் கடந்த காலத்தில் இருந்த மரியாதை பறிபோனதாக குற்றம் சாட்டினார்.
அகிலேஷ் மற்றும் பிரியங்கா இருவரும் இண்டியா கூட்டணியின் ஒரு பகுதியாக சமாஜவாதியும் காங்கிரஸும் ஒருவரையொருவர் வலுப்படுத்துவது குறித்து பேசினர்.
சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒரே ராணுவம் போன்றவர்கள் என்று பிரியங்கா கூறினார்.
ராகுல் ரேபரேலியில் பேசுகையில், தேர்தலில் தோல்வியை பிரதமர் நரேந்திர மோடி உணர்ந்துள்ளார், என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அறிவிப்பை மீண்டும் வலியுறுத்திய ராகுல், 10 கிலோ ரேஷன் மட்டுமல்ல, பருப்பு மற்றும் எண்ணெய்யும் கூட தருவதாக வாக்குறுதி அளித்தார்.
தனது 12 வயதில் தனது தந்தை ராஜீவ் காந்தியுடன் அமேதிக்கு முதன்முதலில் சென்றது பற்றி கூட்டத்தில் கூறிய ராகுல், ரேபரேலி எம்.பி.யாக மட்டும் இருந்துவிடாமல் அமேதியின் எம்.பி.யாகவும் செயல்படுவேன் என்றார்.
Read in English: Sonia in Rae Bareli: Leaving Rahul in your hands, he won’t disappoint
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“