/indian-express-tamil/media/media_files/8Z08w1lNtbAUKc1xUcIy.jpg)
சோரன், வாட்ஸ்அப்பில் அரட்டையடித்த தொலைபேசியை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டதாக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
chief-minister-hemant-soren | enforcement-directorate | ஜார்க்கண்ட் முன்னாள் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் ஜன.31ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் புதன்கிழமை (பிப்.7,2024) அவரை ஆஜர்படுத்தியது.
அப்போது, “ஹேமந்த் சோரன் பணப்பரிமாற்ற பதிவுகள் குறித்து வாட்ஸ்அப்பில் அரட்டைகள் செய்ததாகவும், பல சொத்துக்கள் குறித்த ரகசிய தகவல்களை பரிமாறிக்கொண்டதாகவும், அரசு பதிவுகளை பகிர்ந்து கொண்டதாகவும்” அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
சோரனின் ஐந்து நாள் காவல் புதன்கிழமை (பிப்.7) முடிவடைந்தது, அதன் பிறகு அமலாக்கத் துறை அவரை தினேஷ் ராயின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. முன்னதாக, பிஎம்எல்ஏ (PMLA) நீதிமன்றம் அமலாக்கத்துறையை ஐந்து நாள் காவலில் அனுமதித்தது. சோரன் 8.5 ஏக்கர் நிலத்தின் உரிமையில் ஈடுபட்டதாகக் கூறி ஜனவரி 31 அன்று கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத் துறை தனது ரிமாண்ட் குறிப்பில், “வாட்ஸ்அப் அரட்டையில் பல சொத்துக்கள் தொடர்பான ரகசிய தகவல் பரிமாற்றம் மட்டுமல்லாமல், இடமாற்றம், அரசாங்க பதிவுகளைப் பகிர்வது போன்ற பிற குற்றவியல் தகவல்களும் உள்ளன.
இது தவிர, (நெருங்கிய உதவியாளர்) அதிகாரிகளை இடமாற்றம் செய்தல், ஜார்க்கண்ட் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களின் பல அட்மிட் கார்டுகளை வைத்திருப்பது மற்றும் பகிர்வது தொடர்பாக பல நபர்களுடன் வாட்ஸ்அப் அரட்டைகள் செய்துள்ளார்.
சோரன் அரட்டையடித்த தொலைபேசியை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டதாக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சியங்களைத் தடுக்கும் வகையில் அதிகார துஷ்பிரயோகம் அப்பட்டமாக நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில், ஆகஸ்ட் 8, 2023 அன்று ஏஜென்சியின் முன் ஆகஸ்ட் 14 அன்று ஆஜராகுமாறு அவருக்கு முதல் சம்மன் அனுப்பப்பட்டது.
ராஜ்குமார் பஹான் என்பவர், அந்த நிலம் தன் வசம் இருப்பதாகவும், சிலர் தனது நிலத்தை சட்டவிரோதமாக ஜமாபந்தி பெற முடிந்தது என்றும் கூறி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தன்னை நிலத்தில் இருந்து வெளியேற்றுவதில் இருந்து காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வட்ட அலுவலரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
சோரன் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ராஜீவ் ரஞ்சன், “ஜனவரி 20ஆம் தேதி எட்டு மணி நேரமும், ஜனவரி 31ஆம் தேதி மேலும் எட்டு மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டதால், மேலும் காவலில் வைக்க தேவையில்லை என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.