/tamil-ie/media/media_files/uploads/2022/05/amit-sha.jpeg)
மேற்கு வங்கத்திற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள உள் துறை அமைச்சர் அமித் ஷா, பிசிசிஐ தலைவர் சவுரவ் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார்.
கங்குலி வீட்டிற்கு செல்வதற்கு முன்பு, அமித் ஷா விக்டோரியா நினைவிடத்தில் நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின விழாவிலும், யுனெஸ்கோ கலாச்சார பாரம்பரிய பட்டியலில் துர்கா பூஜையை சேர்க்கும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
கடந்தாண்டு மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகு, ஷா மேற்கு வங்கத்திற்குச் சென்ற முதல் பயணம் இதுவாகும்.
இதுதவிர, கொல்கத்தாவின் காஷிபூரில் கட்டிடம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பாஜக தொண்டர் அர்ஜுன் சௌராசியாவின் குடும்ப உறுப்பினர்களை ஷா நேரில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த அரசியல் கொலை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக சார்பில் வலியுறுத்துகிறோம் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.