ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் பணியாற்றுபவர் அனுராதா ராணி. இவர் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு சக ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது, பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்) சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் அவரை நிறுத்தி, விமான நிலைய நுழைவுவாயிலில் விமான குழுவினரிடம் ஸ்கிரீனிங் செய்யுமாறு கூறியுள்ளார்.
இந்த ஸ்கிரீனிங்கின் போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது. அப்போது அனுராதா ராணி சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் அனுராதா ராணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: SpiceJet woman employee held for ‘slapping’ CISF ASI at Jaipur airport; airline alleges sexual harassment
இதுகுறித்து டி.சி.பி கவேந்திர சிங் கூறுகையில், “அந்தப் பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணும் புகார் அளித்துள்ளார். நாங்கள் உண்மைகளை சரிபார்த்து வருகிறோம், அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் தனது அறிக்கையில், "இன்று, ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் பெண் பாதுகாப்பு ஊழியர் மற்றும் ஆண் சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. ஸ்டீல் கேட் வழியாக கேட்டரிங் வாகனத்தை அழைத்துச் செல்லும் போது, இந்திய சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பீரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பி.சி.ஏ.எஸ்) வழங்கிய செல்லுபடியாகும் விமான நிலைய நுழைவுச் சீட்டைப் பெற்றிருந்த எங்கள் பெண் பாதுகாப்புப் பணியாளர், தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளால் பேசப்பட்டு இருக்கிறார். சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்கள், அவரது வீட்டில் அவரது பணி நேரம் முடிந்ததும் அவரை வந்து சந்திக்கச் சொல்வது உட்பட எல்லாவற்றையும் பற்றி பேசியுள்ளார்.
ஸ்பைஸ்ஜெட் தனது பெண் ஊழியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான இந்த கடுமையான வழக்கில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து உள்ளூர் காவல்துறையை அணுகியுள்ளது. நாங்கள் எங்கள் பணியாளருடன் உறுதியாக நிற்கிறோம் மற்றும் அவருக்கு முழு ஆதரவை வழங்க உறுதிபூண்டுள்ளோம்." என்று கூறியுள்ளது.
ஆனால், ஸ்பைஸ்ஜெட்டின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சி.ஐ.எஸ்எஃப் கமாண்டன்ட் நர்பத் சிங், “அதிகாரி தகாத முறையில் நடந்து கொள்ளவில்லை. அவர் தனது வேலையைச் செய்து கொண்டிருந்தார். பணியில் இருக்கும் அதிகாரியை அறைந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டவர் மீது நாங்கள் புகார் செய்துள்ளோம், மீதமுள்ள விஷயம் விதிமுறைகளின்படி கையாளப்படும், ”என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
இந்த விவகாரம் பற்றி ஜெய்ப்பூர் இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் சரண் சிங் பேசுகையில், இந்த சம்பவம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“