Advertisment

ஸ்டாலின், வி.பி சிங் சிலை மற்றும் அகிலேஷ்: 'ஒரே இந்தியா சமூக நீதிக் குடும்பம்'

இந்த நிகழ்வில் பேசிய ஸ்டாலின், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு அழைப்பு விடுத்தார்

author-image
WebDesk
New Update
Stalin Singh.jpg

முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங்கின் பாரம்பரியத்தை போற்றும் வகையிலும், ஏப்ரல் 20-ம் தேதி சட்டமன்றத்தில் அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்கின் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(நவ.27)  திறந்து வைத்தார். 

Advertisment

விழாவில் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் மனைவி சீதா குமாரி, மகன் அஜயா சிங், பேத்தியினர் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில் மத்திய அரசுக்கு வலுவான கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.  

விகிதாச்சார இடஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்திய ஸ்டாலின், சமூக நீதியை நிலைநாட்ட இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்றும் வலியுறுத்தினார். மேலும், "நாங்கள் அனைவரும் வி.பி. சிங்கின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்,  ஒரே இந்தியா சமூக நீதிக் குடும்பம்" என்று ஸ்டாலின் கூறினார். 

அகிலேஷ் ஸ்டாலினுடன் இணைந்து சிங்கிற்கு மரியாதை செலுத்தினார். எஸ்.பி தலைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நிகழ்விற்கு தேசிய பரிமாணத்தை சேர்த்தது. 

சிங்கின் குடும்பத்தினர் பங்கேற்றது தனிப்பட்ட பரிமாணத்தை சேர்த்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்டாலின் தனது உரையில் கூறுகையில், விபி சிங் உத்தரப் பிரதேசத்தில் பிறந்தவர். அகிலேஷும் அதே மாநிலத்தை சேர்ந்தவர். உ.பி.யின் முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் (மாநிலத்தில்), வருங்கால முதல்வர், என் அன்புச் சகோதரர் அகிலேஷ் இங்கு வருகை தந்துள்ளார். 

விபி சிங்கின் விருப்பமான தலைவரான ராம் மனோகர் லோஹியாவால் வளர்க்கப்பட்ட முலாயம் சிங்கின் மகன் அவர்.

மேலும் கூறுகையில், வி.பி சிங் தமிழ்நாட்டுடன் ஆழமான தொடர்பு கொண்டிருந்தார். சமூக சீர்திருத்தவாதி பெரியாரை மதிப்புடன் போன்றினார் என்று கூறினார்.

“எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த வி.பி.சிங்கின் மனைவி சீதா குமாரி மற்றும் அவரது மகன்கள் அஜயா சிங் மற்றும் அபய் சிங் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் உங்களை வி பி சிங்கின் குடும்பம் என்று அழைக்க விரும்பவில்லை, ஏனென்றால் நாங்கள் அனைவரும் விபி சிங்கின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இது ஒரே இந்தியா சமூக நீதிக் குடும்பம்” என்று அவர் மேலும் கூறினார்.

ஏப்ரலில், தி.மு.க அரசு வி.பி சிங்கிற்கு சிலை நிறுவப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தவுடன், சிங்கின் பேத்திகள் அட்ரிஜா மஞ்சரி மற்றும் ரிச்சா மஞ்சரி ஆகியோர் சமூக ஊடகங்களில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.

சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மண்டல் ஆணைய பரிந்துரைப்படி, மத்திய அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை வி.பி சிங் அமல்படுத்தினார். மண்டல் ஆணைய பரிந்துரைகளை  சிங் அமல்படுத்திய கொந்தளிப்பான காலங்களையும் ஸ்டாலின் நினைவு கூர்ந்தார். 

இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தனது தந்தையும், மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் கவிதைகளை நினைவு கூர்ந்தார். சமூக சமத்துவத்திற்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டைக் கோடிட்டுக் காட்டினார்.

1988-ல் அவர்களின் முதல் சந்திப்பு மற்றும் அதன் பிறகு நடந்த சந்திப்புகளைப் பற்றி கூறிய அவர், சிங் உடனான தனிப்பட்ட தொடர்புகளை ஸ்டாலின் விவரித்தார். சிங் பிரதமராக இருந்த குறுகிய காலத்தில் அவர் செய்த சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார்.

பல்வேறு அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் இல்லாததை சுட்டிக்காட்டி, இந்தியாவின் தற்போதைய சமூக நீதி நிலையை முதல்வர் விமர்சித்தார். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்தப் பணியில் தி.மு.க உறுதியாக உள்ளது என்றார். 

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி இடஒதுக்கீடு கோரி போராடுவது, தமிழகத்தில் சமூக நீதியை கண்காணிக்க குழு அமைப்பது உள்ளிட்ட பல சட்ட முயற்சிகளை திமுக அரசு எடுத்து வருகிறது என்றும் அவர்  கூறினார். 

ஸ்டாலினின் உரையில், காவிரி நதி நீர் பிரச்சனைக்கான நடுவர் மன்றத்தை அமைப்பதில் அவரது பங்கு மற்றும் இலங்கைப் பிரச்சனையைத் தீர்ப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் உட்பட, தமிழ்நாட்டிற்கு சிங் ஆற்றிய பங்களிப்புகளை விவரித்தார். சிங்கின் ஆலோசனையின் பேரில் சென்னையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/stalin-vp-singh-statue-akhilesh-one-pan-india-social-justice-family-9044771/

 ஓபிசி, எஸ்சி, எஸ்டி, சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்த அரசியல் திட்டங்களை அரசுத் திட்டங்களாக மாற்ற இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த முயற்சிக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார், 

திங்கட்கிழமை நிகழ்வானது, சமூக நீதித் தளத்தை அமைப்பதற்கும், தனக்கென ஒரு தேசியப் பாத்திரத்தை உருவாக்குவதற்கும் ஒத்த எண்ணம் கொண்ட பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகளைத் தேடும் ஸ்டாலினின் நீண்ட முயற்சியை உள்ளடக்கியது. ஹைபிரிட் முறையில் நடத்தப்பட்ட அத்தகைய ஒரு கூட்டம், இந்தியா கூட்டணி வடிவம் பெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஒரு டஜன் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கண்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment