/tamil-ie/media/media_files/uploads/2017/12/cooking-gas.jpeg)
மானிய சமையல் எரிவாயுவின் விலை, திடீரென்று ரூ.2.94 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு நள்ளிரவு (1.11.18) முதல் அமலுக்கு வந்தது.
மானிய சமையல் எரிவாயு :
இந்தியாவில் சமையல் எரிவாயு மானிய விலையிலும், மானியம் இன்றியும் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசு சாா்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 12 சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது. 12 சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மேல் வாங்குபவா்களுக்கு அரசின் மானியம் கிடைக்கப் பெறாது.
இந்நிலையில், நள்ளிரவு முதல் மானிய சமையல் எரிவாயுவின் விலை, திடீரென்று ரூ.2.94 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. . ஜி.எஸ்.டி. வரியின் தாக்கமே இதற்கு காரணம் என்று இந்திய எண்ணெய் கழகம் தெரிவித்தது.
அதே போல், டெல்லியில் ரூ.502.40 ஆக இருந்த கியாஸ் விலை, ரூ.505.34 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 6 ஆவது முறையாக சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
மேலும், மானியம் அல்லாத சமையல் கியாஸ் விலையும் ரூ.60 தாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு சாா்பில் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.376.60 காசுகள் மானியமாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது உயா்ந்து ரூ.433.66 மானியமாக வழங்கப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.