/indian-express-tamil/media/media_files/D7pQvhOP9ZdfEkhO6c43.jpg)
இமாச்சலப் பிரதேசம், ஹரியானா அரசுக்கு டெல்லிக்கு கூடுதல் நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் கூடுதல் தண்ணீரை திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 6, 2024) உத்தரவிட்டது. மேலும் இந்த தண்ணீரை டெல்லிக்கு கொண்டு செல்ல வசதி செய்யுமாறு ஹரியானா அரசை கேட்டுக் கொண்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நீரை அளவிடுமாறு மேல் யமுனை நதி வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தண்ணீர் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு டெல்லி அரசைக் கேட்டுக் கொண்டது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Delhi water crisis: Supreme Court asks Himachal to release excess water and Haryana to facilitate its flow to Delhi
இது குறித்த உத்தரவில், “இமாச்சலத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதால், மேல் நீரோட்டத்திலிருந்து 127 கியூசெக் அனுப்ப வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம். இதனால் தண்ணீர் ஹத்னிகுண்ட் தடுப்பணையை அடைந்து வஜிராபாத் வழியாக டெல்லியை சென்றடைகிறது.
இமாச்சலப் பிரதேச மாநிலம் முன்கூட்டியே அறிவித்து உபரி நீரை விடுவிக்கும் போது, ஹத்னிகுண்டில் இருந்து வசிராபாத் வரையிலான நீரை அரியானா மாநிலம் எளிதாக்கும், அதனால் அது தடையின்றி டெல்லியை சென்றடையும். மேலும், குடியிருப்பாளர்களுக்கு குடிநீர் கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் நெருக்கடி மற்றும் டெல்லியில் நிலவும் வெப்ப அலைக்கு மத்தியில் இந்த வழிகாட்டுதல்கள் வந்துள்ளன, இது உடனடியாக தலையீடு செய்ய உச்ச நீதிமன்றத்தை நாட யூனியன் பிரதேசத்தின் அரசாங்கத்தை தூண்டுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.