"அரசு அதிகாரிகள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது": புல்டோசர் நடவடிக்கை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்ட விவகாரத்தில், சட்டத்தை கையில் எடுத்து தனிச்சையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்ட விவகாரத்தில், சட்டத்தை கையில் எடுத்து தனிச்சையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bulodzer case

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகள், அரசு அதிகாரிகள் மூலம் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Executive can’t become judge…decide person is guilty’: SC slams demolition of properties of accused, issues directives

 

Advertisment
Advertisements

குற்றஞ்சாட்டப்பட்ட தனிநபரின் வீடுகள் மற்றும் உடைமைகளை சரியான காரணமின்றி வழிமுறைகளை பின்பற்றாமல் புல்டோசர் கொண்டு இடிப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கிற்கு நீதிபதிகள் பி.ஆர். காவை மற்றும் கே.வி. விஷ்வநாதன் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, “குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை குற்றவாளிகள் என அரசு அதிகாரிகள் முடிவு செய்து அவர்களை தண்டிக்க முடியாது. தனிப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் சொத்துகளை முறையாக காரணங்களின்றி இடித்தல், வரம்புமீறி செயல்படுவது போன்றது“ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், “இது போன்ற நடவடிக்கைளை கையில் எடுக்கும் அரசு அதிகாரிகள் தான், சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். அரசு அதிகாரிகள் தன்னிச்சையாகவும் பாரபட்சமாகவும் நடந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீடுகள் மற்றும் சொத்துகளை அகற்ற வேண்டுமென்றால் அதற்கு உரிய வழிமுறைகள் பின்பற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தண்டனை பெற்ற குற்றவாளிகள் கூட தங்கள் சொத்துகளை பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கை உள்ளதாக நீதிபதிகள் அமர்வு கூறியிருந்தது.

முன்னதாக, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர்களின் வீடுகள் அதிகாரிகளால் இடிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Of India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: