விசாரணை 4 ஆண்டுகள் தாமதம்: ‘நீதியை கேலி செய்யாதீர்கள்’; என்.ஐ.ஏ-வை கண்டித்த சுப்ரீம் கோர்ட்; ஜாமீன் வழங்கி உத்தரவு

பிப்ரவரி 2020-ல் குற்றம் சாட்டப்பட்டவரை மும்பை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பாகிஸ்தானில் இருந்து வந்த கள்ள ரூபாய் நோட்டுகளை மீட்டனர்.

பிப்ரவரி 2020-ல் குற்றம் சாட்டப்பட்டவரை மும்பை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பாகிஸ்தானில் இருந்து வந்த கள்ள ரூபாய் நோட்டுகளை மீட்டனர்.

author-image
WebDesk
New Update
Supreme Court

என்.ஐ.ஏ தரப்பு வழக்கறிஞர் மேலும் கால அவகாசம் கேட்டும், விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. (Express archive)

குற்றச்சாட்டில் தீவிரம் இருந்தபோதிலும், ஒவ்வொரு குற்றவாளிக்கும் விரைவான விசாரணைக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கூறியது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 4 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஒருவரின் ஜாமீன் மனுவை எதிர்த்ததற்காக தேசிய புலனாய்வு முகமையைக் (என்.ஐ.ஏ) உச்ச நீதிமன்றம் கண்டித்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Supreme Court rebukes NIA for 4-year delay in trial, grants bail to accused: ‘don’t make a mockery of justice’

“நீதியை கேலிக்கூத்தாக்காதீர்கள்... நீங்கள்தான் அரசு; நீங்கள் என்.ஐ.ஏ... அவர் (குற்றம் சாட்டப்பட்டவர்) எந்த குற்றத்தைச் செய்திருந்தாலும் விரைவான விசாரணைக்கு உரிமை உண்டு. அவர் கடுமையான குற்றத்தைச் செய்திருக்கலாம், ஆனால், நீங்கள் விசாரணையைத் தொடங்க வேண்டிய கடமையில் இருக்கிறீர்கள். கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இன்றுவரை, குற்றம் சாட்டப்படவில்லை” என்று 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தலைமையிலான நீதிபதி ஜே.பி. பர்திவாலா குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் குலாம் நபி ஷேக்கிற்கு ஜாமீன் வழங்கும் போது கூறினனார்.

என்.ஐ.ஏ 80 சாட்சிகளை விசாரிக்க முன்மொழிந்துள்ளதைக் குறிப்பிடுகையில், நீதிபதி உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு, “அவர் எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்?” என்று கேட்டார்.

Advertisment
Advertisements

என்.ஐ.ஏ தரப்பு வழக்கறிஞர் மேலும் அவகாசம் கேட்டும், விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

“அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தீவிரமான குற்றமாக இருந்தாலும் விரைவான விசாரணைக்கு உரிமை உண்டு” என்று உச்ச நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில் கூறியுள்ளது. மேலும், இந்த உடனடி வழக்கில், இந்த உரிமை விரக்தியடைந்துள்ளது என்பது உறுதியாகிறது, இதனால் பிரிவு 21-ஐ மீறுகிறது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய இருவருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டதையும் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டது.

ஒரு ரகசிய தகவலின் பேரில், மும்பை போலீசார் பிப்ரவரி 9, 2020-ல் ஜாவேத் குலாம் நபி ஷேக்கை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து பாகிஸ்தானில் இருந்து வந்த கள்ள நோட்டுகளை மீட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரியில், மும்பை உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: