பாபா ராம்தேவின் மனிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் பாபாராம்தேவ் செய்வது அப்பட்டமான அத்துமீறல் என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி மற்றும் நவீன மருத்துவ முறைகளுக்கு எதிராக பாபா ராம்தேவ் நிறுவனம் அவதூறு பிரச்சாரம் செய்வதாக இந்திய மருத்துவக் கழகம் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என்று விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, பாபாராம்தேவும், பதஞ்சலி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆச்சாரியா பாலகிருஷ்ணாவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.
அப்போது ராம்தேவ் தரப்பு வக்கறிஞர், தாங்கள் நேரில் ஆஜராகி இருப்பதையும், நிபந்தனையற்ற மனிப்புக் கோருவதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கோரினார். அதற்கு பாபா ராம்தேவ் கோரிய நிபந்தனையற்ற மனிப்பு வெறும் வாய்வார்த்தை என்று உச்சநீமன்றம் தெரிவித்தது.
நீதிமன்றத்திடம் அளித்துள்ள உறுதிமொழிகளை பாபா ராம்தேவின் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், ” நீங்கள் ஒவ்வொரு தடையையும் மீறி இருக்கிறீர்கள். இது அப்பட்டமான அத்துமீறல். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்ற உத்தரவுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது.
அவமதிப்பு நடவடிக்கைக்கு பதிலளிக்க பாபா ராம்தேவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“