Advertisment

தேர்தல் பத்திர தீர்ப்பை அரசு எதிர்க்க வாய்ப்பில்லை; பொதுநல மனுவுக்கு கதவுகள் திறப்பு

தேர்தல் பத்திரம் பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுவது அரசாங்கத்தின் வாக்குறுதி, வங்கி சட்டங்களை மீறும் செயலாகும்- மத்திய அரசு அதிகாரி

author-image
WebDesk
New Update
Supreme Court
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த வியாழனன்று ரத்து செய்து முக்கிய தீர்ப்பு வழங்கியது. இந்த திட்டம்  "அரசியலமைப்புக்கு எதிரானது", "சட்டவிரோதம்" எனக் கூறியது. அதோடு தேர்தல் பத்திரம் பெற்றவர்கள் குறித்த விவரம் உள்ளிட்டவைகளை பொது வெளியில் வெளியிட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

Advertisment

இந்நிலையில், தீர்ப்பு பற்றி மத்திய அரசு வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதி மற்றும் வங்கி ரகசியத் தன்மை விதிமுறைகளை மீறுவதாகும் என்றனர். மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு எதிர்க்க வாய்ப்பில்லை என்றும் கூறினர். 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தேர்தல் நிதியளிப்பு பிரச்சினையை அடுத்த அரசாங்கத்திற்கு விட்டுவிட வேண்டும், இது "தேர்தல் நிதி முறையை மேம்படுத்த" மாற்று வழிகளை "பரிசீலனை செய்யலாம்" என்பது ஸ்தாபனத்தின் கருத்து என வட்டாரங்கள் தெரிவித்தன.

17-வது லோக்சபாவின் 15-வது கூட்டத் தொடர் நிறைவு பெற்று ஒத்திவைக்கப் பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மறுஆய்வு மனு தாக்கல் செய்வதோ அல்லது புதிய நிதியளிப்பு முறையை அமல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிடவோ அரசு தற்போது வரை எந்த பரிசீலனையும் செய்யவில்லை என வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், “பி.ஐ.எல் (பொது நல வழக்கு) தாக்கல் செய்ய” யாரையாவது பயன்படுத்தலாம் என்று அரசு அதிகாரிகள் கூறினர். 

அரசியல் நிதியில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காகவே தேர்தல் பத்திரத் திட்டம் தொடங்கப்பட்டதாக வியாழனன்று பாஜக அதிகாரப்பூர்வமாக கூறினாலும், தேர்தல் செலவினங்களில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. 

"2017 வரை, இது கட்டுப்பாடற்ற பண விளையாட்டாக இருந்தது. இருண்ட, கட்டுப்பாடற்ற முறையில் வெள்ளைப் பணப் பயன்பாட்டிற்கு தேர்தல் நிதி வழங்கும் முறையை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது” என்று ஒரு அதிகாரி கூறினார்.

நன்கொடையாளர்கள் விரோதமாக இருந்தால், உள்ளூர் அரசாங்கத்தினாலோ நிர்வாகத்தினாலோ "சிரமங்களை" தவிர்ப்பதற்காக இந்த ரகசிய உறுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. "நாங்கள் அமைப்பை மேம்படுத்த விரும்பினோம், ஆனால் தொழில்கள் யாருக்கு நன்கொடை அளிக்கின்றன என்பதைப் பொறுத்து உள்ளூர் அரசாங்கங்களால் துன்புறுத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று அவர் மேலும் கூறினார். 

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ஒரு வழியை வழங்காமல் நின்றுவிட்டதாக அரசு தரப்பில் கருத்து நிலவுகிறது. “கருப்புப் பணத்தை வைத்திருக்கும் கட்சிகளும் தலைவர்களும் இப்போது அதைச் செலவிடலாம். நாங்கள் நல்ல பழைய ரொக்கப் பணம் செலுத்தும் முறைக்குத் திரும்புவோம்” என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தது.

மேலும், " தேர்தல் பத்திரம் வழங்கும் வங்கி உடனடியாக தேர்தல் பத்திரம் வழங்குவதை நிறுத்த வேண்டும்" என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.   "இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஏப்ரல் 12, 2019 தேதியிட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்குப் பிறகு வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மார்ச் 13-ஆம் தேதிக்குள் பெயர்களை வெளியிடுவது மிகவும் சாத்தியம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் நம்பிக்கையுடன் இருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,  “நீதிமன்ற உத்தரவை விரிவாகப் படிக்க எங்களுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் பெயர்களை எஸ்.பி.ஐ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. எனவே இதில் எந்த சந்தேகமும் இல்லை, ”என்றார்.  

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/govt-unlikely-to-contest-supreme-court-verdict-on-poll-bonds-door-open-for-pil-9165849/

இந்த நேரத்தில் நிச்சயமற்ற விஷயம் என்னவென்றால், SBI ஆல் பகிரப்பட்ட தரவு, பத்திரம் வாங்குபவரை அதே பத்திரத்தைப் பெற்ற அரசியல் கட்சியுடன் பொருத்த உதவும் வடிவத்தில் வழங்கப்படுமா என்பதுதான். “வடிவம் வாசகர்களுக்கு ஏற்றதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், நன்கொடையாளர் மற்றும் பெறுநரின் அடையாளத்தைக் கண்டறிவது சாத்தியமற்றது அல்ல. அதைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது நிறைய வேலைகளைக் குறிக்கலாம், ”என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

எஸ்.பி.ஐ இடம் இருந்து பெற்ற விவரங்களை ஆணையம் அப்படியே வெளியிடுமா அல்லது மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றை வடிவமைப்பு ஆணையம் வழங்குமா என்பது குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment