Swachh Survekshan 2020 : Indore is the cleanest city in the country : மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தூர் இந்தியாவிலேயே மிகவும் தூய்மையான நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது இந்த நகரம்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த மதிப்பைப் பெற்ற ம.பி. அரசுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார். மேலும் அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சௌஹானின் தொடர் அர்பணிப்பால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றும், முனிசிபல் கார்ப்பரேசனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Heartiest congratulations!
Indore is India’s cleanest city 4th year in a row. The city & its people have shown exemplary dedication towards cleanliness. Congratulations to MP CM @ChouhanShivraj people, political leadership & Municipal Corporation for this superlative performance. pic.twitter.com/cg3DH6PnHM— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 20, 2020
ஸ்வச் சர்வேக்ஷான் (Swach Survekshan) என்ற திட்டத்தின் கீழ் ஸ்வச் மஹோட்சவ் என்று பெயரில் நகர்புறத்தில் நிலவி வரும் தூய்மை சூழலுக்காக இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தூரைத் தொடர்ந்து சூரத் மற்றும் நவி மும்பை நகரங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil