இந்தியா முக்கியமான நாடு, உறவுகளை பேண விரும்புகிறோம்; தாலிபான் தலைமை அறிக்கை

India important, want to maintain ties: Taliban leadership in Qatar: இந்தியாவுடனான எங்கள் அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறோம், இந்த உறவுகள் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் - தாலிபான் அறிக்கை

India important, want to maintain ties: Taliban leadership in Qatar: இந்தியாவுடனான எங்கள் அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறோம், இந்த உறவுகள் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் - தாலிபான் அறிக்கை

author-image
WebDesk
New Update
இந்தியாவின் தலைமையின் கீழ் தாலிபான்கள் மீதான தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட UNSC; சீனா, ரஷ்யா புறக்கணிப்பு

கத்தாரில் உள்ள தாலிபான் தலைமையின் ஒரு உறுப்பினர், இந்தியா "இந்த துணைக்கண்டத்திற்கு மிகவும் முக்கியமானது" என்றும், தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் "கலாச்சாரம்", "பொருளாதாரம்", "அரசியல்" மற்றும் இந்தியாவுடனான "வர்த்தக உறவுகள்" "கடந்த காலத்தைப் போல" தொடர விரும்புவதாகவும் கூறியுள்ளது, இந்தியாவுக்கு ஒரு சமிக்ஞையாகக் கருதப்படுகிறது.

Advertisment

தோஹாவில் உள்ள தாலிபான் அலுவலகத்தின் துணைத் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாய், கவனமாக எழுதப்பட்ட இந்த அறிக்கையின் 46 நிமிட வீடியோ செய்தியானது பஷ்தோவில் எடுக்கப்பட்டு, சனிக்கிழமை தாலிபான் அமைப்பின் சமூக ஊடக தளங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானின் மில்லி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

ஆகஸ்ட் 15 அன்று காபூலில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தாலிபானின் மூத்த தலைவரால் இந்தியாவை நோக்கி இயக்கப்பட்ட முதல் திட்டவட்டமான அறிக்கை இதுவாகும்.

இருப்பினும், பாகிஸ்தான் தாலிபான்களுக்கான நெம்புகோல்களை வைத்திருக்கிறது என்பதற்கான சமிக்ஞை குறிப்பிடத்தக்கது. மேலும், இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி எப்போதும் ஆப்கானிஸ்தானுடனான இந்தியாவின் உறவை எதிர்மறையான செல்வாக்காகக் கண்டுள்ளது.

Advertisment
Advertisements

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின், ஆகஸ்ட் மாதத்திற்கான தலைவராக இந்தியா உள்ளது. அதன் அறிக்கையில் தாலிபான்கள் பற்றிய குறிப்பை ஒரு பத்தியில் இருந்து கைவிட்டது. மேலும் ஆப்கானிஸ்தான் குழுக்கள் " வேறு எந்த நாட்டிலும் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது" என்றும்  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது.

முகமது அப்பாஸ், தற்செயலாக, 1980 களில் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாடமியில் ஆப்கானிஸ்தான் இராணுவ கேடட்டுகளுக்கான பயிற்சியில் பங்கேற்று இருந்தார். 1996 ஆம் ஆண்டில், காபூலில் தாலிபான்கள் முதன்முதலில் பொறுப்பேற்ற பிறகு, இடைக்கால ஆட்சியின் துணை வெளியுறவு அமைச்சராக இருந்த முகமது அப்பாஸ், இந்தியாவிற்கு இதேபோன்ற உறுதிமொழியை அப்போது அளித்தார்.

இந்த முறை, காபூலில் உள்ள தூதரகத்திலிருந்து இந்தியா தனது இந்திய தூதரகத்தை முழுமையாக காலி செய்த நேரத்தில் அவரது அறிக்கைகள் வந்துள்ளன.

இந்த துணைக் கண்டத்திற்கு இந்தியா மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களைப் போலவே இந்தியாவுடனான நமது கலாச்சார, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைத் தொடர விரும்புகிறோம், ”என்று முகமது அப்பாஸ் கூறியுள்ளார்.

"இந்தியாவுடனான எங்கள் அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறோம், இந்த உறவுகள் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என்று முகமது அப்பாஸ் கூறியுள்ளார்.

“பாகிஸ்தான் வழியாக இந்தியாவுடனான வர்த்தகம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவுடன், விமான வழித்தடங்கள் வழியான வர்த்தகம் எப்போதும் திறந்திருக்கும் என இந்தியாவுடனான வர்த்தகத்திற்கான தலிபான்களின் திட்டங்கள் குறித்து, முகமது அப்பாஸ் கூறினார்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான தரைவழி போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் அணுகலை பாகிஸ்தான் எப்போதுமே தடுத்து வந்துள்ளதால், இது இந்தியாவின் பார்வையில் மீண்டும் ஒரு முக்கியமான அறிக்கையாகும்.

துர்க்மெனிஸ்தானுடனான ஆப்கானிஸ்தானின் உறவுகளைப் பற்றி பேசிய முகமது அப்பாஸ், துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா (TAPI) எரிவாயு குழாய் திட்டத்தை பட்டியலிட்டு, ஒரு அரசு அமைந்தவுடன் இந்த முயற்சியை நிறுத்தும் பிரச்சனைகளைத் தீர்க்க தாலிபான் கவனம் செலுத்தும் என்றும் கூறினார்.

ஈரானுடனான உறவுகளைப் பற்றி பேசும் போது இந்தியா உருவாக்கிய சபஹார் துறைமுகத்தையும் முகமது அப்பாஸ் குறிப்பிட்டார், மேலும் வர்த்தகத்திற்கான அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

கடந்த இரண்டு வாரங்களில், தாலிபான் செய்தித் தொடர்பாளர்கள் சுஹைல் ஷாஹீன் மற்றும் ஜபியுல்லா முஜாஹித் ஆகியோர் இந்தியாவுடனான உறவுகள் குறித்த தாலிபான்களின் கருத்துக்களைப் பற்றிப் பேசியுள்ளனர்.

இந்த அறிக்கைகள் அனைத்தையும் கவனமாக கண்காணிக்கும் இந்திய அரசு, இந்த செய்திகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை. ஆனால் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் ஆப்கானியர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு தாலிபான்கள் ஒத்துழைத்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Afghanistan India Taliban

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: