Advertisment

ஹிஜாப் சர்ச்சையின் மையம் உடுப்பி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் : யார் இந்த யஷ்பால் சுவர்ணா?

பழைய ஆர்எஸ்எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஓபிசி தலைவர் யஷ்பால் சுவர்ணா, ஹிஜாப் அணிய உரிமை கோரி நீதிமன்றத்தை நாடிய மாணவிகளை "பயங்கரவாதிகள்" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

author-image
WebDesk
New Update
yashpal Swarna

உடுப்பி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் யஷ்பால் சுவர்ணா

ஹிஜாப் விவகாரத்தில் கல்லூரி மாணவிகளுக்கு எதிராக குரல் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி யஷ்பால் சுவர்ணாவுக்கு, ஹிஜாப் விவகாரம் தொடங்கிய உடுப்பி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

கர்நாக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் அறிவிப்பு என தொடர்ந்து பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க தங்களது தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின் முதற்காட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வேட்பாளர் பட்டியலில் ஹிஜாப் விவகாரத்தில் கல்லூரி மாணவிகளுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்த பாஜக நிர்வாகி யஷ்பால் சுவர்ணா, ஹிஜாப் விவாகரத்திற்கு மையமாக இருந்த உடுப்பி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார். இதன் மூலம் யஷ்பால் சுவர்ணா முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

உடுப்பி சட்டமன்ற தொகுதியில் யஷ்பால் சுவர்ணாவுக்கு சீட் வழங்குவப்பட்டதை தொடர்ந்து அந்த தொகுதியில் தற்போதைய  பாஜக எம்.எல்.ஏ ரகுபதி பட்க்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. உடுப்பி தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற ஒரு பிராமண தலைவரான, ரகுபதி பட் மீண்டும் தனக்கு சீட் கிடைக்கும் என்று நம்பினார்.

ஆனால் இந்த முறை கடலோர பகுதியில் இருந்து அடிமட்டத்தில் பணியாற்றிய ஓபிசி தலைவருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக யஷ்பால் சுவர்ணாவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஒரு மோகவீரா, ஒரு ஓபிசி (OBC) குழு. உடுப்பி அரசு பியூ (PU) மகளிர் கல்லூரியின் மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவராக இருந்து ஹிஜாப் வரிசையில் அவரது முக்கிய பங்கு கட்சியில் அவருக்கான நற்சான்றிதழ்களை உறுதிப்படுத்தியது.

நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை வரை, சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த பட், தன்னை போன்ற விசுவாசமான கட்சி தொண்டனை கட்சி புறக்கணிக்காது என்றும், அவ்வாறு புறக்கணித்தால் அடுத்து என்ன செய்வது என்று அவர் யோசிப்பேன் என்று கூறினார். இதனிடையே டெல்லியில் பாஜக உயர் கட்டளை சீட் அறிவித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அவர் இதில் மகிழ்ச்சியடைய எந்த காரணமும் இல்லை என்று கூறினார்.

மேலும் "நான் கட்சிக்காக உழைத்தேன், கட்சி எனது பங்களிப்பை அங்கீகரித்துள்ளது. நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்று பட் கூறினார். உங்கள் ஆதரவாளர்களின் ஏமாற்றம் காயப்படுத்துமா என்ற கேள்விக்கு, பதில் அளித்த அவர், சுவர்ணா அவர்களின் நம்பிக்கையை வெல்வார் என்ற நம்பிக் இருப்பதாக கூறினார். “உடுப்பியில் தனி நபரை விட கட்சிதான் முக்கியம். சீட் அறிவிக்கப்பட்டதும், அனைவரும் கட்சிக்காக பணியாற்றுவார்கள், அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

யார் யஷ்பால் சுவர்ணா

ஹிஜாப் விவாகரத்தின் மையமாக இருந்து வரும் உடுப்பி அரசு யூபி (PU) மகளிர் கல்லூரியின் வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவரான சுவர்ணா இந்த சர்ச்சையின் போது ஹிஜாப் விவாகரத்தில் ஆதரவு அளித்த அனைவருக்கும் எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடிய 6 மாணவிகளை "பயங்கரவாதிகள்" என்று கூறியவர் யஷ்பால் சுவர்ணா. நாட்டின் சட்டத்தை பின்பற்றாதவர்கள் தேசவிரோதிகள் என்று கூறிய அவர், தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

சுவர்ணாவின் நடவடிக்கைகள்  "ஹிஜாப் அணிய முற்படும் மாணவிகளை எதிர்கொள்வதற்காக மாணவர்களுக்கு குங்குமப்பூ சால்வைகளை வழங்குவது" உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் மூலம் ஹிஜாப் சர்ச்சை நீடித்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவுவதை உறுதி செய்ததார் என்று கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

சுவர்ணாவின் தந்தை ஒரு வங்கியாளராக இருந்தவர். மீன்பிடித் தொழிலைத் தொடங்கிய நிலையில், இப்பகுதியில் சுவர்ணாவின் செல்வாக்குடன் குடும்ப வணிகமும் உயர்ந்துள்ளது, 45 வயதான அவர் பெரும்பாலும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மொகவீர சமூகத்தின் குரலாக இருக்கிறார். கடலோர கர்நாடகத்தில், கடல்களை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர் பிராந்தியத்தை கட்டுப்படுத்துகிறார் என்று சொல்வது, சுவர்ணா விஷயத்தில் அது உண்மைதான்.

கடந்த 13 ஆண்டுகளாக, அவர் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களின் கூட்டுறவு மீன் விற்பனை கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார். கடலோர மாவட்டங்களில் சாதியை விட வகுப்புவாதப் பிரச்சனைகள் அதிகம் உள்ள இடங்களில், கர்நாடகாவின் மற்ற பகுதிகளைப் போலல்லாமல், பாஜக மீது சுவர்ணாவின் ஈர்ப்பு இயல்பாகவே இருந்தது. அதேபோல் இந்தக் குடும்பத்துக்கு ஆர்எஸ்எஸ்ஸுடன் பழைய தொடர்பு இருந்தது.

1980 ஆம் ஆண்டு வரை, சுவர்ணாவின் மாமா ரகுநாத், ஆர்.எஸ்.எஸ்.காரர், அவர் சூரத்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கல்லூரியில் படிக்கும் போது, சுவர்ணா ஏபிவிபியிலும் (ABVP) , அதைத் தொடர்ந்து பஜ்ரங் தளத்திலும் இணைந்தார். 20 வயதுகளின் பிற்பகுதியில், அவர் ஒரு பசு கண்காணிப்பாளராக உள்ளூரில் நற்பெயரைப் பெற்றார். 2005 ஆம் ஆண்டில், கன்றுகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் ஒரு தந்தை மற்றும் அவரது மகனை மடக்கி ஊர்வலமாக இழுத்துச்சென்றதாக குற்றம்சாட்டப்பட்ட அவர் பின்னர் சிறப்பு நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.

2017 ஆம் ஆண்டில், உடுப்பியின் பேஜாவர் மடத்தின் ஸ்ரீ விஸ்வேஷதீர்த்த சுவாமிஜி மடத்திற்குள் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்தபோது, ​​எதிர்ப்பு தெரிவித்தவர்களில் சுவர்ணாவும் ஒருவர். "முஸ்லிம்களை உபசரிக்க வேண்டாம் என்று நான் பார்ப்பனரிடம் சொன்னேன், ஆனால் அவர் எனது குரு என்பதால் அவருக்கு எதிராக பொதுவில் கருத்து தெரிவிக்கவில்லை," என்று அவர் தெரிவித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment