மத்திய பட்ஜெட் ரயில்வே நிதி: தமிழக திட்டங்கள் ரத்தா? தெற்கு ரயில்வேயின் அதிர்ச்சி முடிவு

புதுச்சேரி வழியாக சென்னை-மாமல்லபுரம்-கடலூர் வழித்தடம், மதுரை-தூத்துக்குடி புதிய வழித்தடம் போன்ற முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும். இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வழியாக சென்னை-மாமல்லபுரம்-கடலூர் வழித்தடம், மதுரை-தூத்துக்குடி புதிய வழித்தடம் போன்ற முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும். இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Train service

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ₹6,626 கோடியில், 12 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ₹728 கோடியை தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்திடம் திருப்பி அனுப்பியுள்ளது. புதுச்சேரி வழியாக சென்னை-மாமல்லபுரம்-கடலூர் வழித்தடம், மதுரை-தூத்துக்குடி புதிய வழித்தடம் போன்ற முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும். 

Advertisment

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.    

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ₹6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி புதிய வழித்தடம் (2024-25 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட ₹55.16 கோடி), காட்பாடி-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை திட்டம் (₹200 கோடி), ஈரோடு-கரூர் பாதை திட்டம், திண்டிவனம்-திருவண்ணாமலை வழித்தடம் (₹42.7 கோடி), மற்றும் புதுச்சேரி வழியாக சென்னை-மாமல்லபுரம்-கடலூர் வழித்தடம் (₹52.13 கோடி) உள்ளிட்ட 12 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ₹728 கோடியை தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்திடம் திருப்பி அனுப்பியுள்ளது.

நிதி திருப்பி அனுப்பப்பட்டதன் பின்னணி:

Advertisment
Advertisements


தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங், மத்திய ரயில்வே வாரியத்திற்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியில், பட்ஜெட்டில் ஒரு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, அந்த திட்டம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தி வைக்கப்பட்டால், அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருத்தல் அல்லது விரிவான திட்ட அறிக்கை மீளாய்வு என்று குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் அனுப்பிய கடிதத்தில், இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதிலாக ரத்து செய்ய வேண்டும் என்பதை பிரதிபலிப்பதாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழக மக்களிடையே கடுமையான அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய திட்டங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு:

நிதி திருப்பி அனுப்பப்பட்ட திட்டங்களில் சர்ச்சைக்குள்ளான மதுரை-தூத்துக்குடி திட்டமும் அடங்கும். இந்த திட்டம் தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கைவிடப்பட்டதாக சென்னையில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். ஆனால், இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, மதுரை-தூத்துக்குடி வழித்தட பணிகள் செயல்பாட்டில் உள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும், காட்பாடி-விழுப்புரம், சேலம்-திண்டுக்கல், ஈரோடு-கரூர் திட்டங்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த திட்டங்களின் எதிர்காலம் குறித்து கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Puduchery

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: