புதுச்சேரி கிரீடா பாரதி அமைப்பு சார்பில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கும் விழா புதுச்சேரி ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசியலில் வரும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும்; அரசியலில் கிடைத்த வாய்ப்பை இழக்கும் அளவிற்கு சூழ்நிலை இருந்திருக்கக்கூடாது.
கெளதமிக்கு அரசியலில் பணியாற்ற வேண்டிய வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். கௌதமியை நன்றாக தெரியும், எந்தவித பந்தாவும் இல்லாமல் கட்சியில் நன்றாக பணியாற்றக்கூடியவர்.
அவரது பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் ஏன் தீர்க்கப்படவில்லை என தெரியவில்லை. என்னிடம் வந்திருந்தால் நேரிடையாக உதவி செய்ய முடியவில்லை என்றாலும் மறைமுகமாக உதவி செய்து இருப்பேன்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“