Advertisment

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வர தமிழ்நாடு, பீகாரில் தீர்மானம் நிறைவேற்றம்

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வர வேண்டும்; 3 மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் பீகார் தீர்மானம் நிறைவேற்றம்

author-image
WebDesk
Sep 19, 2022 16:54 IST
Rahul

ராகுல் காந்தி

ராஜஸ்தான், சத்தீஸ்கர் குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து, காங்கிரஸின் தமிழ்நாடு மற்றும் பீகார் பிரிவுகள் தற்போது ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

Advertisment

இன்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, PTI க்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் அனைத்து விருப்பங்களும் திறந்திருப்பதாகக் கூறியதாகத் தெரிகிறது. புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்தைத் தேடும் ப.சிதம்பரம், அவர் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, கட்சியில் ராகுலுக்கு எப்போதுமே ஒரு “முக்கிய இடம்” இருக்கும், என்று கூறினார். தலைவர் பதவிக்கு வருவதற்கான வேண்டுகோளை ராகுல் கவனிப்பாரா என்று குறிப்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, சிதம்பரம் கூறினார்: “ராகுல் காந்தி கட்சியின் அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட தலைவர். அவர் தலைவராக வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். இதுவரை, அவர் மறுத்துவிட்டார். அவர் மனம் மாறலாம்” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: ராகுல் காந்தி தலைவராக வர 3 மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 22-ம் தேதி வெளியாகிறது. வேட்புமனுக்களை செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 30 வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30, 2022 மற்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 8 ஆகும்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

முன்னதாக சனிக்கிழமை, ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வர விருப்பம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. ஒரு நாள் கழித்து, ஞாயிற்றுக்கிழமை, கட்சியின் சத்தீஸ்கர் பிரிவும் தீர்மானம் நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து குஜராத் காங்கிரஸ் பிரிவும் தீர்மானம் நிறைவேற்றியது.

"இன்று நடைபெற்ற மாநில காங்கிரஸ் பிரதிநிதிகள் கூட்டத்தில் பின்வரும் 2 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன: 1) அகில இந்திய காங்கிரஸ் தலைவர், மாநில காங்கிரஸ் தலைவர், பொருளாளர் மற்றும் மாநில நிர்வாகிகளை அமைக்க அதிகாரம் பெற்றவர் 2) திரு ராகுல் காந்தி மீண்டும் தேசியத் தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.” இந்த தீர்மானங்களை நிறைவேற்றிய பிறகு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ட்வீட் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பாகேல் கூறியதாவது: சத்தீஸ்கர் காங்கிரஸ் கமிட்டி மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி இந்த திட்டத்தை முன்வைத்துள்ளன. இது 2 மாநிலங்களில் செய்யப்பட்டுள்ளது, ஆனால் மற்ற மாநிலங்களிலிருந்தும் இந்த திட்டம் வந்தால், ராகுல்ஜி இந்த விஷயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

முன்னதாக, நாடு தழுவிய அளவில் காங்கிரசின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நான் காங்கிரஸ் தலைவராகிறேனா இல்லையா என்பது தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும்போது தெளிவாகத் தெரியும். என் மனதில் எந்தக் குழப்பமும் இல்லை," என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Rahul Gandhi #Congress #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment