Advertisment

தேர்தலில் தோல்வியடைந்த அம்பேத்கர்: அதை சந்திரசேகர் ராவ் இப்போது பேசுவது ஏன்?

நாடாளுமன்றத் தேர்தலில் அம்பேத்கரை தோற்கடித்த வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். காங்கிரஸ் அவரை தோற்கடித்தது, அவரது சித்தாந்தத்தை செயல்படுத்தவில்லை...

author-image
WebDesk
New Update
BR Ambedkar

The election B R Ambedkar lost and why KCR brought it up in a poll speech

தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி (BRS) அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களில் தலித் நலன் உள்ளது, நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சமூகத்திற்கான அதன் திட்டங்களை கட்சி மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்துகிறது.

Advertisment

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ், ஹைதராபாத் அருகே உள்ள மாநிலச் செயலகம் அருகே 125 அடி உயரத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு உலகிலேயே மிக உயரமான சிலையை நிறுவி, தலித் பந்து (Dalit Bandhu) போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியது தனது அரசுதான். அதன் மூலம் என்று பட்டியலிடப்பட்ட சாதி (SC) குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நேரடி பலன் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

காங்கிரஸை குறிவைத்த ராவ், கடைசி தலித் குடும்பத்திற்கு தலித் பண்டு கிடைக்கும் வரை பிஆர்எஸ் அரசு செயல்படும். தலித்துகளுக்காக அம்பேத்கர் பல போராட்டங்களை நடத்தினார். நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தோல்வியை உறுதி செய்தது காங்கிரஸ்தான்.

நாடாளுமன்றத் தேர்தலில் அம்பேத்கரை தோற்கடித்த வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். காங்கிரஸ் அவரை தோற்கடித்தது, அவரது சித்தாந்தத்தை செயல்படுத்தவில்லை,'' என்றார்.

சந்திரசேகர் ராவ் எந்தத் தேர்தலைக் குறிப்பிட்டார்?

1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் மத்திய அமைச்சரவையை உருவாக்கினார், அதில் 15 உறுப்பினர்கள் பலதரப்பட்ட சமூகங்கள் மற்றும் அவரது அறியப்பட்ட சில எதிர்ப்பாளர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டாக்டர் அம்பேத்கர் மத்திய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் மேலாதிக்கம் அந்த நேரத்தில் உச்சத்தில் இருந்தது, ஆனால் பல்வேறு அரசியல் கட்சிகளும் முதல் தேர்தலுக்கு முன்பே தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளத் தொடங்கின.

நேருவின் கீழ் தொழில்துறை அமைச்சராக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி, இந்து வலதுசாரியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக-வின் முன்னோடியான பாரதிய ஜனசங்கத்தை அமைப்பதற்காக பிரிந்து சென்றார்.

அம்பேத்கர் பட்டியல் சாதி கூட்டமைப்பை (SCF) உருவாக்கினார். முன்னதாக அவர் 1936 இல் சுதந்திர தொழிலாளர் கட்சியை (ILP) நிறுவினார்.

2002 ஆம் ஆண்டு வேர்ல்ட் பாலிசி ஜர்னலில் வெளியிடப்பட்ட "Democracy's Biggest Gamble: India's first free Elections in 1952" என்ற தலைப்பில் வரலாற்றாசிரியர் ராம்சந்திர குஹா எழுதிய கட்டுரையில், அம்பேத்கர் "தாழ்த்தப்பட்ட சாதியினரை உயர்த்துவதற்கு காங்கிரஸ் சிறிதும் செய்யவில்லை" என்று கடுமையாக தாக்கினார்.

அதே பழைய கொடுங்கோன்மை, அதே பழைய அடக்குமுறை, அதே பழைய பாகுபாடு... சுதந்திரம் பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சி ஒரு தர்மசாலாவாக (ஓய்வெடுக்கும் இல்லமாக) சீரழிந்து விட்டது என்றார் அம்பேத்கர்.

நோக்கம் அல்லது கொள்கைகளின் ஒற்றுமை இல்லாமல், முட்டாள்கள், நண்பர்கள், எதிரிகள், வகுப்புவாதிகள், மதச்சார்பின்மைவாதிகள், சீர்திருத்தவாதிகள், ஆர்த்தோ-டாக்ஸ் மற்றும் முதலாளித்துவவாதிகள் மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் கட்சி திறந்திருக்கிறது, என்று குஹா எழுதினார்.

முதல் பொதுத் தேர்தல்- அக்டோபர் 1951 மற்றும் பிப்ரவரி 1952 க்கு இடையில் நடைபெற்றது, அம்பேத்கர் பம்பாய் வட மத்திய தொகுதியில் போட்டியிட்டார். அசோக் மேத்தா தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி அவருக்கு ஆதரவளித்தது.

இது இரட்டை உறுப்பினர் தொகுதியாகும், அதாவது இரண்டு பிரதிநிதிகள் அதில் குறைந்தபட்சம் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். இந்த நடைமுறை 1961 இல் ஒழிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எஸ் ஏ டாங்கே போன்ற பெரிய தலைகள் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில், அம்பேத்கர் காங்கிரஸின் நாராயண் சதோபா கஜ்ரோல்கரிடம் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இதன் விளைவாக நேருவின் ஆட்சியில் காங்கிரஸ் அலை அதிகமாக இருந்தது.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 489 இடங்களில் 364 இடங்களிலும், சட்டமன்றங்களில் உள்ள 3,280 இடங்களில் 2,247 இடங்களிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

தோல்வியைத் தொடர்ந்து அம்பேத்கர் தேர்தல் முடிவுக் குறித்து கேள்வி எழுப்பினார்.

பம்பாய் பொதுமக்களின் அமோக ஆதரவை எப்படி இவ்வளவு மோசமாக பொய்யாக்க முடியும் என்பது தேர்தல் ஆணையாளரால் விசாரிக்கப்பட வேண்டிய விஷயம், என்று ஜனவரி 5, 1952 அன்று அவர் கூறியதாக ஒரு PTI அறிக்கை மேற்கோள் காட்டுகிறது.

அம்பேத்கரும், மேத்தாவும் இணைந்து தேர்தல் முடிவை ரத்து செய்து, அதை செல்லாது என அறிவிக்கக் கோரி தலைமை தேர்தல் ஆணையரிடம் கூட்டாக தேர்தல் மனு தாக்கல் செய்தனர்.

ஒட்டுமொத்தமாக 74,333 வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்பட்டன மற்றும் எண்ணப்படவில்லை, என்று அவர்கள் கூறினர்.

அம்பேத்கரின் தோல்வி என்ன சொல்கிறது?

அரசியல் விஞ்ஞானி Christophe Jaffrelot 2010 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச மைய காலாண்டு இதழில் வெளியிடப்பட்ட சாதியும் அரசியலும்என்ற கட்டுரையில்: SCF மகாராஷ்டிராவில் மட்டுமே உள்ளது மற்றும் அம்பேத்கர் சொந்த மஹர் சமூகத்திற்கு அப்பால் வாக்காளர்களை ஈர்க்க முடியவில்லை என்பதை தேர்தல் காட்டுகிறது, என்று எழுதுகிறார்.

1956 இல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய குடியரசுக் கட்சி, "தலித்துகளுக்கு மட்டும் அல்லாமல், மத சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் போன்ற பிற குழுக்களுக்கு, திறந்திருந்தது.

இந்த அணுகுமுறை 1960களில் இந்திய குடியரசுக் கட்சியின் எழுச்சியை உறுதி செய்யும்.

இந்தக் கண்ணோட்டத்தைத்தான் பகுஜன் சமாஜ் கட்சி, பின்னர் இன்னும் வெற்றிகரமாகப் பின்பற்ற வேண்டும், என்று ஜாஃப்ரெலோட்  எழுதினார்.

Read in English: Rewind and replay: The election B R Ambedkar lost and why KCR brought it up in a poll speech

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dr Ambedkar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment