Advertisment

உத்தரகாண்டில் ஆற்றில் டெம்போ டிராவலர் விழுந்து விபத்து; 14 பேர் மரணம்

உத்தரகாண்டின் அலக்நந்தா ஆற்றில் டெம்போ டிராவலர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு மற்றும் 12 பேர் காயம்

author-image
WebDesk
New Update
uttarakhand accident

உத்தரகாண்டின் அலக்நந்தா ஆற்றில் டெம்போ டிராவலர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு மற்றும் 12 பேர் காயம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள அலக்நந்தா ஆற்றில் டெம்போ டிராவலர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர் என்று மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) வட்டாரம் தெரிவித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

ஹரியானா பதிவு எண் கொண்ட வாகனம் டெல்லியில் இருந்து 26 பேரை ஏற்றிக்கொண்டு விபத்து ஏற்பட்டபோது சோப்தாவுக்குச் சென்று கொண்டிருந்தது, குர்கானைச் சேர்ந்த பயண முகவரிடமிருந்து உள்ளூர் காவல்துறை இந்தத் தகவலைப் பெற்றதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய SDRF கமாண்டன்ட் மணிகாந்த் மிஸ்ரா, முதன்மைத் தகவலின்படி, ருத்ரபிரயாக் நகருக்கு சற்று முன்னால் ஒரு திருப்பத்தில் இரவு 11.30 மணியளவில் விபத்து நடந்ததாகக் கூறினார். முதற்கட்ட விசாரணையில், மறைவான திருப்பத்தின் காரணமாக டெம்போ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிகிறது, என்று கூறினார்.

SDRF மீட்புக் குழு அந்த இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் உடல்நிலை சீராக உள்ள நிலையில், 4 பேர் தீவிர சிகிச்சை பெற எய்ம்ஸ் ரிஷிகேஷுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

“ருத்ரபிரயாக் மாவட்டத்தில் டெம்போ டிராவல்லர் விபத்துக்குள்ளானதில் மிகவும் வருத்தமான செய்தி கிடைத்தது. உள்ளூர் நிர்வாகம் மற்றும் SDRF குழுக்கள் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை வழங்க கேட்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பாபா கேதாரை பிரார்த்திக்கிறேன்” என்று புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Uttarakhand accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment