உத்தவ் - ராஜ் தாக்கரே கைகோர்ப்பு: ஏக்நாத் ஷிண்டே கவலையில் இருப்பது ஏன்?

19 ஆண்டுகளாக அரசியலில் எதிரெதிராக செயல்பட்டு வரும் சகோதரர்கள் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மாநில நலனுக்காக, சொந்த 'ஈகோ'வை விடத் தயாராக இருப்பதாக இருவரும் கூறியுள்ளனர்.

19 ஆண்டுகளாக அரசியலில் எதிரெதிராக செயல்பட்டு வரும் சகோதரர்கள் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மாநில நலனுக்காக, சொந்த 'ஈகோ'வை விடத் தயாராக இருப்பதாக இருவரும் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
thackeray

உத்தவ் - ராஜ் தாக்கரே கைகோர்ப்பு; ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஏன் கவலை?

கடந்த 19 ஆண்டுகளாக அரசியலில் எதிரெதிராக செயல்பட்டு வரும் சகோதரர்கள் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மாநில நலனுக்காக சொந்த 'ஈகோ'வை விடத் தயாராக இருப்பதாக இருவரும் கூறியுள்ளனர்.  2 பேரும் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பையும், திருப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தாக்கரே உறவினர்கள் மீண்டும் ஒன்றுசேரும் வாய்ப்பை நண்பர்கள் மற்றும் எதிரிகள் வரவேற்றுள்ளனர்.

Advertisment

ஒருவரைத் தவிர. உத்தவ்-ராஜ் தாக்கரே கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அரசின் நிர்வாகம் குறித்து மட்டுமே கேளுங்கள்' என ஆவேசமாக கூறினார். இது அவரது எரிச்சலை காட்டுகிறது. சிவசேனா (UBT) மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) இணைவது ஷிண்டேவுக்கு எதிராக திரும்பும் என கூறப்படுகிறது. 

உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரேவின் இந்த திடீர் மனமாற்றம் காரணமாக அவர்களின் 20 ஆண்டு கால அரசியல் பகை முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர், உத்தவ் தாக்கரேவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ரஹன்மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். 

ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே அரசியலில் பின்னடவை சந்தித்து வரும் நிலையில் அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என மீண்டும் குரல்கள் ஒலிக்க தொடங்கின. உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே முன்பு அமைதிக்காக முயற்சித்திருந்தாலும், இதுவே மிகவும் தீவிரமான முயற்சியாக தெரிகிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களில் ஷிண்டே சேனாவை விட தனது சேனா (UBT) மிகவும் பின்தங்கிய நிலையில், உத்தவ் தன்னைக் கண்டறிந்த நிலையில், இந்த கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

Advertisment
Advertisements

பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து ராஜ் தாக்கரே, கூறுகையில், "எனக்கு மராட்டிய மாநிலத்தின் நலன் தான் முக்கியம். அதற்கு முன் மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சம் தான். அதற்காக சின்ன சின்ன பிரச்சினைகளை தள்ளி வைத்துவிட்டு உத்தவ் தாக்கரே உடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். அதற்கு அவர் தயாரா?" என கேட்டிருந்தார். அதே நாளில், பேசிய உத்தவ் தாக்கரே, "மராத்தி மொழி மற்றும் மராட்டிய மாநில நலனுக்காக சின்ன பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ராஜ் உடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என்று கூறி இருந்தார்.

உத்தவ்-ராஜ் தாக்கரே கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அரசின் நிர்வாகம் குறித்து மட்டுமே கேளுங்கள்' என ஆவேசமாக கூறினார். 

சிவசேனாவின் பெயரையும் தேர்தல் சின்னத்தையும் பெற்று, சட்டமன்றத் தேர்தலில் 2-வது பெரிய கட்சியின் தலைவராக உருவெடுத்து, வலுவான பெரும்பான்மையுடன் மகாராஷ்டிர அரசாங்கத்தில் துணை முதல்வராக மீண்டும் ஆட்சிக்கு வந்த ஷிண்டே, சமீபத்தில் சேனாவை (UBT) மேலும் முடக்கத் தொடங்கினார்.

உத்தவ் தாக்கரேவை ராஜ் தனது கூட்டாளியாகத் தேர்ந்தெடுத்தால், அது சிவசேனாவை (UBT) வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தாக்கரே மரபை அபகரித்தவர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஷிண்டேவை மேலும் ஆளாக்கும்.

ராஜ் தாக்கரே 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து விலகினார். அவர் 2006-ம் ஆண்டு நவநிர்மாண் சேனா கட்சியை தொடங்கினர். சிவசேனாவில் இருந்து விலகிய பிறகு, அதற்கு உத்தவ் தாக்கரே தான் காரணம் என ராஜ் தாக்கரே குற்றம்சாட்டினார்.அன்று முதல் சிவசேனாவும், நவநிர்மாண் சேனாவும் எதிரும், புதிருமாக உள்ளன. பெரும்பாலும் பிரிந்த தாக்கரே சகோதரர்கள் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை கூட தவிர்த்து வந்தனர். பால் தாக்கரே மரணம் போன்ற குறிப்பிடத்தகுந்த சில நிகழ்ச்சிகளில் மட்டுமே 2 பேரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஆனால் 2 பேரும் நேரில் சந்திப்பதை தவிர்த்து வந்தனர். நவநிர்மாண் சேனா தொடங்கப்பட்ட காலத்தில் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத செல்வாக்கு இழந்த கட்சியாக உள்ளது

உண்மையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை, மகாயுதி கூட்டணியின் முக்கியப் பொறுப்பை பா.ஜ.க சுமந்த போது, ஷிண்டே சேனா, சிவசேனா (UBT) கட்சியிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்வதாகக் காணப்பட்டது. மக்களவைத் தேர்தலில், உத்தவ்வின் கட்சி 9 இடங்களையும், ஷிண்டேவின் கட்சி 7 இடங்களையும் வென்றிருந்தன.

தாக்கரே காரணமாக இல்லாவிட்டாலும், ஷிண்டே மற்ற கவலைகளுடன் போராடி வருகிறார், அவற்றில் மிகப்பெரியது பா.ஜ.க.வின் வளர்ந்து வரும் பலம். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியைப் பெறுவதற்காக ஷிண்டே நீண்ட காலம் காத்திருந்தார். இறுதியில் துணை முதல்வர் பதவியுடன் போட்டியிட வேண்டியிருந்தது. தனக்கு விருப்பமான இலாகாக்களைப் பெற ஷிண்டே போராடினார். மேலும் பாஜக தன்னை விட மற்றொரு துணை முதல்வரான என்.சி.பி.யின் அஜித் பவாரை விரும்புகிறது என்ற எண்ணத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்.

ஷிண்டேவைத் தவிர சேனா தலைவர்களும் தாக்கரே மீண்டும் இணைவதற்கான வாய்ப்பை கடுமையாக சாடியுள்ளனர் (அ) குறைத்து மதிப்பிட்டுள்ளனர். அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத், "தாக்கரே உறவினர்கள் ஒன்றுபட்டால் நாங்கள் இனிப்புகளை விநியோகிப்போம்" என்று கூறினார். கட்சித் தலைவர் சஞ்சய் நிருபம், "2 பூஜ்ஜியங்கள் பூஜ்ஜியத்தை உருவாக்குகின்றன" என்று கூறினார். அதே நேரத்தில் சேனா எம்பி நரேஷ் மாஸ்கே உத்தவை "ஒரு நவீன துரியோதனன்" என்று அழைத்தார்.

உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து செயல்பட்டால் தங்களுக்கு மகிழ்ச்சிதான் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அவர்கள் இருவரும் ஒன்றிணைவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் இணைவதில் யாரும் வருத்தப்பட எந்தக் காரணமும் இல்லை. ஒருவர் அழைப்பு விடுக்க, அதற்கு மற்றொருவர் பதில் தந்துள்ளார். அதில் நாங்கள் ஏன் தலையிட வேண்டும்?" எனக் கூறினார்.

மறுபுறம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல், இந்தச் செய்தியை "இதயத்தை மகிழ்விக்கிறது" என்று கூறினார்.

Maharashtra

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: