ஜனவரி 22 ஆம் தேதி ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோவில் திறக்கப்படுகிறது. ராம் லல்லா சிலையின் பிரான் பிரதிஷ்டை அல்லது கும்பாபிஷேகம் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் நீடிக்கும்.
ஒவ்வொன்றும் 20 அடி உயரத்தில் மூன்று தளங்களில் கட்டப்பட்ட இந்த வளாகத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகள் உள்ளன.
கோவில் கட்டிடக்கலை நாகரா பாணியில் கட்டப்பட்டு வரும் இந்த கோவில் கருவறையில் ராம் லல்லா சிலை வைக்கப்படும். ஸ்ரீ ராம் தர்பார் முதல் தளத்தில் இருக்கும் மற்றும் ஐந்து மண்டபங்கள் உள்ளன.
இது, நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனா மண்டபம் மற்றும் கீர்த்தன் மண்டபம் ஆகியவை ஆகும்.
வடக்கு மற்றும் தெற்கு கரங்களில் முறையே அன்னபூரணி மற்றும் அனுமன் கோவில்கள் கட்டப்படும். இவை தவிர, மகரிஷி வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அகஸ்தியர், நிஷாத் ராஜ், ஷப்ரி போன்றவர்களின் கோவில்களும் இந்த வளாகத்தில் கட்டப்பட உள்ளன.
தூண்களில் சூரியன், சிவன், பார்வதி, விநாயகர் சிலைகள் உள்ளன. மேலும் சுவர்களில் மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கோவிலின் அஸ்திவாரம் 14 மீட்டர் தடிமன் கொண்ட ரோலர்-காம்பாக்ட் செய்யப்பட்ட கான்கிரீட் அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது, இது ஒரு செயற்கை பாறையின் தோற்றத்தை அளிக்கிறது. நிலத்தடி ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்க 21 அடி உயர கிரானைட் பீடம் போடப்பட்டு, எங்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கான சாய்வுதளங்கள் மற்றும் லிப்ட்கள் குளியலறை மற்றும் கழிப்பறைகளுடன் வளாகத்தில் தனித் தடுப்புடன் கட்டப்பட்டுள்ளன. 25,000 பேருக்கு மருத்துவ வசதி மற்றும் லாக்கர் வசதிகளுடன் கூடிய யாத்ரீகர்கள் வசதி மையம் ஒன்றும் இருக்கும்.
சுற்றுச்சூழல் மற்றும் நீர் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, 70 ஏக்கர் பரப்பளவில் 70% பசுமையாக உள்ளது.
ராஜஸ்தானில் இருந்து மக்ரானா மார்பிள் மற்றும் இளஞ்சிவப்பு மணற்கல், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் இருந்து கிரானைட் கல், மத்திய பிரதேசத்தில் உள்ள மாண்ட்லாவில் இருந்து வண்ண பளிங்கு ஆகியவை கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் இருந்து 4.7 லட்சம் கன அடி நீளமுள்ள இளஞ்சிவப்பு மணற்கற்கள் பிரதான கோயில் அமைப்பிலும், 17,000 கிரானைட் கற்கள் பீடங்களிலும், வெள்ளை நிற மக்ரானா மற்றும் வண்ண பளிங்குக் கற்களும் பதிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மகாராஷ்டிராவின் பலார்ஷா மற்றும் அல்லபள்ளி வனப்பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட தேக்கு மரங்கள் கோயிலின் 44 கதவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன, இதில் 14 தங்க முலாம் பூசும் வேலை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோயில் வளாகத்திற்கு சொந்தமாக கழிவுநீர் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தீயணைப்பு சேவை மற்றும் ஒரு சுயாதீன மின் நிலையம் இருக்கும் என்று அறக்கட்டளை செயலர் சம்பத் ராய் தெரிவித்திருந்தார்.
என்ஐடி சூரத்; மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், ரூர்க்கி; நேஷனல் ஜியோ ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், ஹைதராபாத் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ராக் மெக்கானிக்ஸ் ஆகியவை கோவிலுக்கு இறுதி வடிவம் கொடுக்க இணைந்து செயல்பட்டன.
கும்பாபிஷேக விழாவிற்காக 460 கைவினைஞர்கள் உட்பட 4,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோவிலின் தரை தளத்தை தயார் செய்வதற்காக இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.
டிரஸ்ட் திட்ட மேலாளர் ஜெகதீஷ் அபாலே, இந்தியா முழுவதும் உள்ள 550 கோவில்களில் சிறந்த கட்டுமான மாதிரிகளை கண்டறிய ஆய்வு செய்ததாக கூறினார். “கோயில் வளாகத்தில் ஒரே நேரத்தில் 1,500 பேர் தங்கலாம்.
மதுரா மற்றும் காசியில் உள்ள சில பழமையான கோவில்கள் மின்னல் தாக்கத்தால் சேதமடைந்ததை ஆய்வு செய்த பின்னர், இந்தியாவில் முதல் முறையாக சோதனை செய்யப்பட்ட கோவிலின் மீது 200KA லைட் அரெஸ்டர்களை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
யாத்ரீகர்கள் கோயிலின் பரிக்ரமாவை எடுக்கும்போது, நடைபாதைகள் மற்றும் நெடுவரிசைகளில் வால்மீகியின் ராமாயணத்தில் இருந்து 100 நிகழ்வுகள் பொறிக்கப்பட்டுள்ளன, மேலும் அதில் ராம் கதா தரிசனமும் அடங்கும், ”என்று யாத்திரை நிர்வாகத்தின் பொறுப்பாளரும் அபாலே கூறினார்.
கும்பாபிஷேக விழாவின் துவக்கம்:
ஜனவரி 16: சரயு கரையில் விஷ்ணு பூஜை
ஜனவரி 17: ராம் லல்லா சிலை ஷோபா யாத்ரா அல்லது நாகர் பிரமனுக்கு கண்களை மூடிக்கொண்டு கொண்டு செல்லப்படும். சரயுவில் இருந்து தண்ணீர் கலசமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்படும்.
ஜனவரி 18: விநாயகர் மற்றும் வருணனுக்கான பிரார்த்தனைகள், மற்ற சடங்குகள் மற்றும் கோவிலில் மந்திரங்கள் ஓதுதல்
ஜனவரி 19: அனைத்து கிரகங்களையும் மகிழ்விப்பதற்காக கோவில் தளத்தில் நவ்கிரஹ் சாந்தி ஹவான்
ஜனவரி 20: கருவறையை சரயு நீரால் கழுவ வேண்டும், வாஸ்து சாந்திக்காக பூஜைகள் நடத்தப்படும்
ஜனவரி 21: ராம் லல்லாவின் சிம்மாசனம் 125 கலசங்களில் சரயு நீரால் கழுவப்படும்
ஜனவரி 22: பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகள், அதைத் தொடர்ந்து அபிஜித் முஹுரத்தில் பிரான் பிரதிஷ்டை
ஆங்கிலத்தில் வாசிக்க : The Ayodhya Ram temple: 4 mandirs at each corner, 5 mandaps and emphasis on green cover
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“