Advertisment

ராமர் கோவில் திறப்பு விழா; நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தவிக்கும் காங்கிரஸ்

ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துக் கொள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கும் அழைப்பு; பங்கேற்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் சிக்கலில் தவிக்கும் காங்கிரஸ்

author-image
WebDesk
New Update
ram temple

ராமர் கோவில் (கோப்பு படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Manoj C G

Advertisment

ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை அல்லது கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அழைப்பால் காங்கிரஸ் சிக்கலில் சிக்கியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக வரும் இந்த விழாவின் மூலம் பா.ஜ.க.,வுக்கு அரசியல் ஆதாயம் பாயும் என்பதை அறிந்த காங்கிரஸ், அரசியல் கண்ணிவெடியில் சிக்கி, தேர்தல் பாதிப்பை ஏற்படுத்தாத நிலையை உருவாக்க முடியாமல் திணறி வருகிறது.

ஆங்கிலத்தில் படிக்க: The road to Ram temple event paved with mines for it, Congress tries to find a ‘safe’ course

இந்த விவகாரம் இந்தியா கூட்டணியிலும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். CPI(M) கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என்று சி.பி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதோடு, பா.ஜ.க (BJP) மற்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) மதத்தையும் அரசியலையும் கலப்பதாக விமர்சித்துள்ளது, அதே வேளையில், திரிணாமுல் காங்கிரஸும் மம்தா பானர்ஜி கலந்துக் கொள்ளமாட்டார் என்று சமிக்ஞை செய்துள்ளது. சமாஜ்வாதி கட்சி எம்.பி.,யும், கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ், அழைக்கப்பட்டால் கலந்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

புதன்கிழமை, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்றாலும், "கட்சியைச் சேர்ந்த பலர் பங்களித்துள்ளதால்" கட்சி மகிழ்ச்சியடைவதாக கூறியதாக பி.டி.ஐ அறிக்கை தெரிவித்துள்ளது. பா.ஜ.க.,வைப் பற்றி சரத் பவார் கூறினார்: பா.ஜ.க இந்தப் பிரச்சினையை அரசியல் அல்லது வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறதா என்று தெரியவில்லைஎன்று கூறினார்.

கேரளாவில், காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஐ.யு.எம்.எல்-ன் துணை அமைப்பு, இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தெளிவான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியதைக் கேள்வி எழுப்பியது, இது போன்ற சிக்கலான நிலைப்பாடுதான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்று கூறியது.

சிக்கலில் சிக்கிய காங்கிரஸ் இன்னும் அதிகாரப்பூர்வமான கருத்தை வெளியிடவில்லை. பல தலைவர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் உணர்வுப்பூர்வமான விஷயத்தில் ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறினர்.

காங்கிரஸில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு ராமர் கோயில் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளீர்களா என்று கேட்டதற்கு, கட்சி முடிவு செய்யும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார். தான் "முறையாக, அனைத்து மரியாதையுடன்" அழைக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் பிரதிஷ்டையை கட்டியெழுப்புவது "மதம் மற்றும் ஒரு அரசியல் லட்சியத்தை பிரதிபலிக்கிறது... இது மிகவும் தெளிவாக உள்ளது" என்று கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை வெளிப்படையாக ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களில் ஒருவரான மூத்த தலைவர் திக்விஜய சிங், இந்து மதத்தை தனது தோள்களில் அணிந்துகொண்டு, இந்துத்துவா பிரச்சினைகளில் பா.ஜ.க.,வை அடிக்கடி விமர்ச்சிக்கிறார்.

கோயில் அறக்கட்டளை எந்தக் கட்சிக்கும் சொந்தமானது அல்ல, இது தேசிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது, சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் கட்சியின் குழு செல்லலாம் என்று திக்விஜய சிங் சமீபத்தில் கூறினார். அவர் (சோனியா) எப்போதுமே இந்த விஷயங்களில் மிகவும் சாதகமாக இருக்கிறார். கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். கட்சி என்ன முடிவெடுத்தாலும் நான் கட்சியுடன் இருக்கிறேன்,” என்று திக்விஜய சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் புதன்கிழமை தெரிவித்தார்.

லோக்சபா எம்.பி., சசி தரூரின் நிலைப்பாடு, காங்கிரசுக்கு எந்த விஷயமும் எளிதாக இல்லை என்பதை பிரதிபலிக்கிறது. தனிப்பட்ட முறையில், மத நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயம், அதை அரசியல் ரீதியாக பார்க்கவோ, அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தவோ கூடாது என்று நான் நம்புகிறேன். அழைக்கப்பட்ட யாரும் செல்லவில்லை என்றால் 'இந்து விரோதிகள்' அல்லது அவர்கள் கலந்து கொண்டால் 'பா.ஜ.க.,வின் கைகளில் விளையாடுகிறார்கள்' என்று விவரிக்கப்படுவதை விட, தனிப்பட்ட முறையில் அவர்கள் விருப்பத்துடன் செயல்பட சுதந்திரமாக விடப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று சசி தரூர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

சசி தரூர் மேலும் கூறியதாவது: ஒரு இந்துவாக என்னைப் பற்றி பேசுகையில், ஒரு கோவிலை அரசியல் நாடக மேடையாகக் காட்டிலும் தெய்வீகத்துடன் இணைக்கும் இடமாக நான் பார்க்கிறேன். நான் ஒரு நாள் ராமர் கோவிலுக்குச் செல்ல விரும்புகிறேன், ஆனால் திறப்பு விழா போன்ற பிரமாண்டமான அரசியல் களியாட்டத்தின் போது அல்ல, தேர்தலுக்கு முன் அல்ல, அதனால் எந்த அரசியல் அறிக்கையும் நான் செல்வதாக இருக்கக் கூடாது.”

கடந்த வாரம் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திலும் இந்த விவகாரம் ஒரு சுருக்கமான குறிப்புக்கு வந்துள்ளது, அங்கு ஒரு மூத்த தலைவர் கட்சி உட்கார்ந்து இந்த விஷயத்தில் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டு வருமாறு வலியுறுத்தினார்.

இந்தி மையப்பகுதியை பா.ஜ.க முழுவதுமாக துருவப்படுத்தப் போகிறது என்பதால், நமது கடந்தகால நிலைப்பாடுகளுடன் ஒத்துப்போகும் மற்றும் விஷயத்தின் உணர்திறனைக் கருத்தில் கொண்டு மிகத் தெளிவான நிலைப்பாட்டை நாம் உருவாக்க வேண்டும். எனவே, இது மிகவும் நுணுக்கமான மற்றும் சரியான கதையாக இருக்க வேண்டும். நாம் சிக்கலைக் கவனமாகக் கையாளவில்லை... இது போன்ற உணர்வுப்பூர்வமான விஷயத்தை நாம் மிகவும் சாதாரணமான மற்றும் கேவலமான முறையில் நடத்துகிறோம்... (எல்லாம் இயல்பானது, விஷயங்கள் நடக்கும்) என்பது போல நாங்கள் பிரச்சினையை நடத்துகிறோம்,” என்று ஒரு தலைவர் கூறினார்.

போகாதது, "கோயிலைப் புறக்கணித்தது" என்ற குற்றச்சாட்டிற்கு காங்கிரசை ஆளாக்கிவிடும் என்று மற்றொரு தலைவர் சுட்டிக்காட்டினார். வெளிப்படையாகச் சொன்னால், கோயிலைக் கட்டுவதில் அரசுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் இப்போது, ​​நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இது எளிதான சூழ்நிலை அல்ல. நாங்கள் மகிழ்ச்சியான நிலையில் இல்லை. காங்கிரஸின் கருத்து என்னவாக இருக்கும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்... நிலைப்பாடு தெளிவாக விளக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஹிந்தி இதயத்தில் பலமாக அடிபடுவோம்என்று அந்த தலைவர் கூறினார்.

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான சாம் பிட்ரோடாவின் அறிக்கைகளை அக்கட்சி குறைவாகவே விரும்புகிறது. “... தேசத்தில் அனைவரும் ராமர் கோயிலில் ஈடுபடும்போது... தியா ஜலாவோ (விளக்குகள்)அது என்னைத் தொந்தரவு செய்கிறது. என்னைப் பொறுத்தவரை மதம் என்பது தனிப்பட்ட விஷயம். அதை தேசிய நிகழ்ச்சி நிரலுடன் குழப்ப வேண்டாம். தேசிய நிகழ்ச்சி நிரல் கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி, பொருளாதாரம், பணவீக்கம், சுகாதாரம், சுற்றுச்சூழல், மாசுபாடு... இவை அனைத்தும் விவாதிக்கப்படவில்லை. பேச்சு இந்து கோவில் மற்றும் ராமர் பற்றியது. நீங்கள் ஒரு நவீன தேசத்தை உருவாக்குவது இப்படி அல்ல,” என்று அவர் ANI இடம் கூறினார்.

அவரது கருத்துக்கு பா.ஜ.க.,வினர் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர்.

மற்றும் காங்கிரஸில் உள்ள சிலரால் எதிர்க்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது: காங்கிரஸ் இறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லை, சாம் பிட்ரோடா போன்றவர்கள் விரைவாக இறுதி அறிக்கையை வெளியிடுகின்றனர். இவைதான் கடந்த தேர்தலில் எங்களை பாதித்தது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்த அவரது ஹுவா டோ ஹுவா (என்ன நடந்தது, நடந்தது)என்ற கருத்தை நினைவில் கொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Congress Ram Mandir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment