கேரளாவை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியை ஒருவர், வீடற்றவர்களுக்கு வீடு கட்டித்தரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் எம்.எஸ்.சுனில். ஓய்வுபெற்ற பேராசிரியையான இவர், கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் வீடற்றவர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதை எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் செய்துவருகிறார். முதன்முறையாக தன் மாணவி ஒருவர் பாதுகாப்பற்ற இடத்தில் வசிப்பதைக்கண்டு, மற்றவர்களிடம் நிதி வசூல் செய்து அவருக்கு வீடி கட்டித்தந்தார் சுனில். அப்படி ஆரம்பித்த அவருடைய சேவை இந்த 11 ஆண்டுகளில், மொத்தம் 78 வீடுகளை மற்றவர்களின் உதவியுடன் கட்டி முடித்துள்ளார்.
இவருடைய இந்த பணியை கேள்விபடும் பணம் படைத்தவர்களும் இவருக்கு நிதியுதவி செய்துவருகின்றனர்.
“முதலில் இந்த பணி மூலம் பயனடைபவர்கள் குடும்பத்தில் பெண்கள் இருக்க வேண்டும். அதன்பின், அந்த குடும்பம் குறித்து விசாரிப்பேன், அவர்களுக்கு வீடு தேவைப்படுகிறதா என. 78 வீடுகளில் இரண்டு பேருக்கு மட்டும்தான் நாங்கள் நிலத்தை வாங்க வேண்டியிருந்தது. மற்றவர்களிடம் ஏற்கனவே நிலம் இருந்தது, இல்லையென்றால் ஊராட்சி நிலம் தரும்”, என yourstory.com-க்கு சுனில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முதன்முதலி அவர் கட்டிய வீடு ரூ.60,000 செலவானது. கடைசியாக அவர் கட்டிய வீட்டுக்கு ரூ.2,50,000 செலவானது.