India's ban on TikTok : இந்தியாவிற்கும் சீனாவுக்குமிடையே எல்லை பிரச்சனை புதிய பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சீனாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஸ்மார்ட்போன் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிக்டாக், ஷேர்இட், ஹலோ மற்றும் க்ளப் ஃபேக்ட்ரி போன்ற 59 முக்கியமான ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் – போலீசார் மீது நடவடிக்கை?.
இந்நிலையில் இன்று காலை டிக்டாக் நிறுவனத்தின் இந்திய தலைவர் நிகில் காந்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “டிக்டாக் செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சீனா உட்பட எந்த வெளிநாட்டினருக்கும் நாங்கள் பகிரவில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் டிக்டாக் தடை செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமும் அரசிற்கு அளித்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் டிக்டாக் இந்தியாவில் உள்ள 14 மொழிகள் பேசும் நபர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஆயிரக்கணக்கான கலைஞர்களை இணைக்கும் தளமாக இயங்கி வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டிக்டாக் ஆப் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil