திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமி கருடசேவை ரத்து; அடுத்த ஆண்டுதான் இனி கருடசேவை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பவுர்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. கருடசேவையை ரத்து செய்ததற்கான காரணங்களையும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பவுர்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. கருடசேவையை ரத்து செய்ததற்கான காரணங்களையும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tirupati restrictions

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமி கருடசேவை ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவில் கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடக்க உள்ள பவுர்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Advertisment

மே மாதம் 12-ந்தேதி, ஜூலை மாதம் 10-ந்தேதி, ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி, அக்டோபர் மாதம் 7-ந்தேதி, நவம்பர் மாதம் 5-ந் தேதிகளில் நடைபெற உள்ள பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. கருடசேவையை ரத்து செய்ததற்கான காரணங்களையும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் 11-ந்தேதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் (3-வது நாள்) நடப்பதாலும், செப்டம்பர் 7-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்வதாலும், டிசம்பர் மாதம் 4-ந்தேதி கார்த்திகை தீபம் நடப்பதாலும் பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளது. இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tirupati

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: