திருப்பதி கூட்ட நெரிசல்; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட; 3 பேர் டிரான்ஸ்பர்; தேவஸ்தான நிர்வாகத்திலும் மாற்றங்கள்

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த விவகாரம்; பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்; 3 பேர் பணியிட மாற்றம் செய்து உத்தரவு; தேவஸ்தான நிர்வாகத்திலும் பல்வேறு மாற்றங்கள்

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த விவகாரம்; பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்; 3 பேர் பணியிட மாற்றம் செய்து உத்தரவு; தேவஸ்தான நிர்வாகத்திலும் பல்வேறு மாற்றங்கள்

author-image
WebDesk
New Update
triupati chandrababu

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள SVIMS மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் காயமடைந்த நபரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை சந்தித்தார். (பி.டி.ஐ புகைப்படம்)

Sreenivas Janyala

திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததை அடுத்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு 2 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து 3 பேரை இடமாற்றம் செய்தது, மேலும், திருப்பதி மாவட்ட நிர்வாகம் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (TTD) வியாழன் அன்று பல தலைகள் உருண்டன. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Heads roll after Tirupati stampede — Deputy SP, two others suspended, 3 officers transferred, big changes at TTD

புதன்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட்ட சந்திரபாபு நாயுடு, திருப்பதியின் துணைக் காவல் கண்காணிப்பாளர் ரமண குமார் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) எஸ்.வி பால் பண்ணை இயக்குநர் ஹரிநாத ரெட்டி ஆகியோரை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். திருப்பதி எஸ்.பி எல் சுப்பராயுடு, இணை செயல் அதிகாரி எம் கவுதமி, திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி எஸ் ஸ்ரீதர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான டிக்கெட் விநியோகம் நடைபெறும் பத்மாவதி பூங்காவின் கதவுகள் புதன்கிழமை இரவு திறக்கப்பட்டபோது ஏற்பட்ட நெரிசல் குறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். இந்த கூட்டநெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்தனர்.

Advertisment
Advertisements

கூட்ட நெரிசல் நடந்த பத்மாவதி பூங்காவில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் மற்றும் பாதுகாப்புப் பணியில் துணை எஸ்.பி ரமணா குமார் இருந்தார். இதற்கிடையில், டிக்கெட் கவுன்டர்களை எங்கு அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு ஹரிநாத ரெட்டி வசம் இருந்தது. ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் கூட்டத்தை தவறாக நிர்வகிப்பதாக அவரது அரசாங்கம் விமர்சிக்கப்பட்டு வரும் நேரத்தில் முதல்வரின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

அறிவிப்புகளை வெளியிடும் போது, சந்திரபாபு நாயுடு, டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கப்பட்ட சில இடங்கள் அதிக கூட்டத்தை கையாள்வதற்கு ஏற்றதாக இல்லை என்பதையும், தேவஸ்தானம் மற்றும் திருப்பதி காவல்துறையில் உள்ள ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் வேலையை சாதாரணமாக எடுத்துக்கொண்டதையும் கவனித்தார். "பல்வேறு நிலைகளில்" தோல்வி ஏற்பட்டதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

சுப்பாராயுடு மற்றும் ஸ்ரீதர் ஐ.பி.எஸ் அதிகாரிகள், கவுதமி ஐ.ஏ.எஸ் அதிகாரி.

"துணை எஸ்.பி ரமணா குமார், மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை வெளியேற்றுவதற்காக பத்மாவதி பூங்காவில் உள்ள வாயில்களை திறக்குமாறு கேட்டபோது, அவர் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துக் கொண்டுள்ளார்" என்று முதல்வர் கூறினார். “அவர் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி. அவர் நிலைமையை நன்றாக மதிப்பீடு செய்திருக்க வேண்டும்... என்ன நடந்தது என்றால், பின்பக்கம் இருந்த பக்தர்கள், கதவுகள் திறக்கப்பட்டு டிக்கெட் வழங்கப்பட்டுவிட்டதாக நினைத்து, அவர்கள் அவசரமாக வெளியே வர முயன்றதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் எந்தத் தவறும் மரணத்தை விளைவிக்கும், மன்னிக்க முடியாது,” என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான டிக்கெட்டுகளை மாவட்ட அளவில் வழங்குவது போன்ற நடவடிக்கைகளையும் சந்திரபாபு நாயுடு பரிந்துரைத்தார். இதற்கிடையில், திருப்பதிக்கு சென்ற துணை முதல்வர் கே.பவன் கல்யாண், திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நிலைமையை சரியான முறையில் மதிப்பிடுவதில் தேவஸ்தானம் மற்றும் காவல்துறை "தோல்வியுற்றதாக" குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சியான யுவஜன ஸ்ராமிகா விவசாயி காங்கிரஸ் கட்சி (YSRCP) அரசாங்கம் சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தை கூட்ட நெரிசல் விமர்சிக்கும் நேரத்தில் பவன் கல்யாண் திருப்பதி வந்துள்ளார். ஒரு அறிக்கையில், ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரும் முன்னாள் ஆந்திரப் பிரதேச அமைச்சருமான வேலம்பள்ளி சீனிவாச ராவ் புதன்கிழமை பெரும் கூட்டத்தை நிர்வகிப்பதில் "நன்கு அறியப்பட்ட தேவஸ்தானத்தின் வரலாற்றில் ஒரு "கருப்பு" நாள்” என்று விவரித்தார்.

Tirupati Tirupathi Devasthanam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: