Advertisment

‘லாக் சபா’ போர்ட்டல் தொடங்கிய ராஜ்பவன்: மே.வங்க ஆளுநருக்கு எதிராக டி.எம்.சி தேர்தல் ஆணையத்தில் புகார்

மத்திய இணை அமைச்சர் நிசித் பிரமானிக் (கூச் பெஹார் தொகுதி பா.ஜ.க வேட்பாளர்) மற்றும் மாநில அமைச்சர் உதயன் குஹா ஆகியோருக்கு இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலையடுத்து ஆளுநர் ஆனந்த போஸ் வடக்கு வங்காளத்தில் உள்ள தின்ஹாட்டாவுக்குச் சென்றார்.

author-image
WebDesk
New Update
Gov Ananda Bose.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மக்களவைத் தேர்தலின் போது மக்களுடன் தொடர்பு கொள்ள ராஜ்பவனில் “லாக் சபா”  (Log Sabha) போர்டல் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) வெள்ளிக்கிழமை இந்திய தேர்தல் ஆணையத்திடம் (இ.சி.ஐ) புகார் அளித்தது. ஆளுநர் ஆனந்த போஸ் இவ்விவகாரத்தில் சட்டவிரோதமாக தலையிடுவதாகவும், தேர்தல் ஆணையம் போன்ற ஒரு இணையான அலுவலகத்தை நடத்த முயற்சிப்பதாகவும் டி.எம்.சி குற்றஞ்சாட்டி உள்ளது. 

Advertisment

“தேர்தல் ஆணையத்திற்கு மார்ச் 22-ம் தேதியிட்ட டி.எம்.சியின் கடிதத்தில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநில நிர்வாகம் திறம்பட செயல்படும் போது, ​​வாக்கெடுப்பின் போது குறைகளை நிவர்த்தி செய்வதற்கு பயனுள்ள தீர்வுகள் உள்ளன.

"லாக் சபா" போன்ற கூடுதல் செயல்முறையை  சேர்ப்பது தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது மட்டுமல்லாமல், குறைகளை நிவர்த்தி செய்வதற்கான தேர்தல் ஆணையத்தின் அமைப்பை அகற்றுவது மட்டுமல்லாமல், மேலும் மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது" என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும், “மாண்புமிகு ஆளுநரின் முயற்சிகள் குறித்து மேற்பார்வையிடவும், கட்டுப்படுத்தவும், அடுத்தடுத்த தேர்தல்களை மேற்பார்வையிடவும், டாக்டர் சி.வி. ஆனந்த போஸ் வடக்கு வங்காளத்தில் உள்ள தின்ஹாட்டாவுக்குச் சென்றுள்ளார். தின்ஹாட்டா, கூச் பிஹார் நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதி என்பதைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது. இந்த தொகுதி முதல் கட்ட தேர்தலை சந்திக்கிறது”  என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/kolkata/bengal-governor-parallel-poll-body-tmc-complain-ec-c-v-ananda-bose-9228944/

கூச் பெஹாரில் இருந்து பா.ஜ.கவால் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர் நிசித் பிரமானிக்கின் ஆதரவாளர்களும், டி.எம்.சியின் அமைச்சர் உதயன் குஹாவும் சமீபத்தில் மோதிக்கொண்டதை அடுத்து ஆளுநர் தின்ஹாட்டாவுக்குச் சென்றார். இதற்கிடையில், டி.எம்.சியின் புகார் குறித்து ராஜ்பவன் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment