Advertisment

கேள்வி எழுப்ப பணம் கேட்ட குற்றச்சாட்டு: டி.எம்.சி எம்.பி மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து நீக்கம்

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் கேட்ட வழக்கில், நெறிமுறைக் குழு, மஹுவா மொய்த்ராவை நீக்க பரிந்துரை செய்து அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து நீக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Mahua Moitra at Pariament

டி.எம்.சி எம்.பி மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து நீக்கம்

முன்னதாக, மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா மொய்த்ராவை அவையில் பேச அனுமதிக்கவில்லை, நெறிமுறைக் குழு கூட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறினார். இதையடுத்து, அவர் தான் பேசுவதற்கு அனுமதி கேட்க உரிமை உள்ளது என்று கூச்சலிட்டு வெளிநடப்பு செய்ய வழிவகுத்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: TMC MP Mahua Moitra expelled from Lok Sabha following Ethics panel’s report on cash-for-query allegations

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 5வது நாள் அமர்வு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 08) நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக பணம் கேட்ட வழக்கில், நாடாளுமன்ற நெறிமுறைக் குழு, மஹுவா மொய்த்ராவை நீக்க பரிந்துரை செய்து அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து நீக்கப்பட்டார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து வெளியேற்றுவதற்கான தீர்மானம் கொண்டு வந்து மக்களவையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.

முன்னதாக, மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா மொய்த்ராவை அவையில் பேச அனுமதிக்கவில்லை, நெறிமுறைக் குழு கூட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறினார். இதையடுத்து, அவர் தான் பேசுவதற்கு அனுமதி கேட்க உரிமை உள்ளது என்று கூச்சலிட்டு வெளிநடப்பு செய்ய வழிவகுத்தது.

எதிர்க்கட்சித் தலைவர்களின் அமளிக்கு மத்தியில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அவை கூடியது. 104 பக்க அறிக்கையின் நீளத்தை மேற்கோள் காட்டி, மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆராய எம்.பி.க்கள் போதுமான அவகாசம் வழங்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஒரு முறையான கோரிக்கையில், அவர் 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு காலக்கெடுவை முன்மொழிந்தார். இதனால், உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபடுவதற்கு முன்பு அறிக்கையைப் படிக்க முடியும். எங்கள் கருத்துக்களை சரியான முறையில் முன்வைக்க மூன்று-நான்கு நாட்கள் அவகாசம் அளித்திருந்தால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருக்காது” என்று காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி கூறினார்.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ராஜ்யசபாவில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற வேகத்தை இந்தியா தொடர்ந்து பராமரித்து வருவதாகவும், இரண்டாவது காலாண்டு வளர்ச்சி உலகிலேயே மிக அதிகமாக இருப்பதாகவும் கூறினார். அனைத்து துறைகளிலும் பொருளாதார செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று கூறிய நிர்மலா சீதாராமன், அனைத்து துறைகளும் கணிசமாக வளர்ந்து வருவதாக கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

mahua moitra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment